LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கடமை வீரருக்குக் கண்ணீர் அஞ்சலி

தொடர்ந்து இருந்து வந்து மூட்டுவலி சற்று அதிகமாகி முடநோய் என்ற அளவிற்கு வந்தது . நல்ல உயரமும் பருமனான உடலும் கொண்ட இவரது உடலின் எடையைத் தாங்கும் சக்தியை இழக்கும் அளவிற்கு அந்த நோயின் தாக்கம் அதிகமானது . அதனால் நன்கு நடமாட முடியவில்லை . மருத்துவர்கள் இவரது உடல் எடையைக் குறைக்க ஆலோசனை கூறினர் . அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன . தாமே எழுந்து நடக்கமுடியாத அளவிற்கு முட நோயால் தாக்கப்பட்டிருந்தார் .

ஏழைப்பங்காளரும் , கடமைவீரரும் , அரசியல் வித்தகருமான காமராசர் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் திடீரென மாரடைப்பினால் இயற்கை எய்தினார் . இச்செய்தியைக் கேள்வியுற்ற கக்கன் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை . தாம் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தாலும் காமராசரின் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமது ஆசையைக் குடும்ப உறுப்பினர்களிடம் சொன்னார் . கண்கள் நீரை வடித்தவண்ணம் இருந்தன . அவர் அழுததைப் பார்த்திராத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர் .

நினைத்தவுடன் பயணம் செய்ய வசதியில்லை . செல்லும் வகையைச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது , அவர் கடைசித்தம்பி விஸ்வநாதன் அங்குவந்து வேண்டிய உதவிகளைச் செய்தார் . அவர் தம்பி விஸ்வநாதனும் கக்கனும் காமராசர் வீட்டிற்குச் சென்றனர் . காமராசரின் உடல் இராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதாகக் கேள்வியுற்று இராஜாஜி மண்டபத்திற்குச் சென்றனர் . காமராசருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது . என்றாலும் கக்கனைப் பார்த்ததும் அனைவரும் ஒதுங்கி வழிகொடுத்தனர் . கண்ணீர் வடிக்கும் மக்கள் கூட்டம் சாரைசாரையாக வந்து கொண்டிருந்தது . அமரர் காமராசரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சற்று இடைவெளிவிட்டுக் கக்கனுக்கு ஒர் இருக்கை தந்து அமரசச் செய்தனர் . பெருகிய கண்ணீர்த்துளிகளே தம் தலைவருக்குச் செய்யும் வழிபாடாகக் கருதிய கக்கன் வாய்விட்டழுத காட்சி காண்போர் உள்ளத்தை உருக்கியது !.

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.