LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

காதல் என்பது -முனைவர். சித்ரா மகேஷ்

இன்றைய வாழ்வில் காதல் குறித்த செய்திகள் இல்லாமல் அன்றாடச் செய்திகள் இல்லை. அப்படியான காதல் அன்றைய காலத்திலிருந்து இன்றைய நாள்வரை எதுவும் மாறாது நடந்து வருகிறது. கண்டதும் காதல் தொடங்கி, திருமணம், அதைத் தொடர்ந்து இல்லற வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நம் சங்க கால உறவுகள் வாழ்ந்ததன் தொடர்ச்சியே. அவற்றிற்கான குறிப்புகளை இலக்கணங்களாகவும், இலக்கியப்பாடல்களின் வழியாகவும் பதிவு செய்துள்ளனர் புலவர்கள். ஒவ்வொரு செய்தியும் படிக்கும் போது இது நம் வாழ்வில் அன்று நடந்தது என்றும், நண்பனுக்கு நேர்ந்தது என்றும் திகைப்பை ஏற்படுத்தும் செய்திகளாகக் காணமுடிகிறது.

பாங்கன் கூட்டம் தலைவனுக்குத் துணையாக இருக்கும் போது, தலைவிக்குத் துணையாகக் காதல் காலத்தில் இன்பம், துன்பம் எனத் தொடர்ந்து வருபவள் பாங்கி எனும் தோழி. தலைவி, தோழி இருவரின் நட்பின் வலிமையும், ஆழமும் காதலுக்கு உறுதுணையாக நிற்கச் செய்கிறது. இப்படி இந்தக் காதலில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அவை…

பகற்குறி: பகல் நேரத்தில் இருவரும் சந்தித்துப் பழகுதல்

இரவுக்குறி: இரவு நேரத்தில் தலைவன் கடல், காடு கடந்து தலைவியின் வீட்டின் அருகே வந்து காத்திருப்பதைச் சில குறிப்பினால் தெரியப்படுத்திப் பின்னர் இருவரும் சந்திக்கின்றனர். அப்படிச் சந்திப்பதைப் பற்றிச் சொல்வதே இரவுக்குறி எனப்படும்.

இரவுக்குறி இடையீடு: அப்படி இரவுநேரத்தில் தலைவன் வரும்பொழுது சூழ்நிலைகள் காரணமாகத் தலைவனும், தலைவியும் இருவரும் சந்திக்க முடியாது போவதை இரவுக்குறி இடையீடு என்றழைத்துள்ளனர்.

வரைவு கடாதவுதல்: நாள்தோறும் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்கப் பல இன்னல்களைத் தாண்டித் தலைவன் வரவேண்டியுள்ளது. அப்படிச் சந்திக்கும் காதலை அறிந்த ஊரினர் பேசுவதும், தலைவியும் பிரிவினால் உள்ளம் வாடி, உடல் மெலிந்து காணப்படுவது ஊரார் பேசுவதற்கான காரணமாக அமைவதும் கண்டு, தோழி தலைவனிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தலைவனுக்கு உணர்த்துவதை வரைவு கடாதல் என்று கூறினர்.

வரைபொருட் பிரிவு: திருமணம் செய்து கொள்வதற்குத் தேவையான பொருள்களைத் தேடிச் சேர்ப்பதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்வது.

உடன்போக்கு: காதலைத் தலைவியின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததை அறிந்த தலைவன், அவளைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது.

வரைவு: திருமணம் செய்து கொள்வதற்காகப் பொருள் சேர்த்து வந்த பின்னர் அனைவரிடம் சொல்லுகின்றனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டதும் திருமணம் நடைபெறும். பின்னர் இருவரும் இன்பத்துடன் இல்லறம் நடத்தத் தொடங்குபவர்.

காதலில் நிகழும் இதுபோன்ற காதல் நிகழ்வுகளைப் பெயரிட்டு அகப்பாடல்களின் வழியே அதைக் காட்சிப்படுத்தி நம் முன்னோர்கள் வாழ்ந்த முறைகளைச் சொல்லியுள்ளனர் சங்கப் புலவர்கள்.

காதல் இரு உள்ளங்களின் சந்திப்பில் நிகழ்வது. 

காதல் என்பது எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இரு உள்ளங்கள் இணைவது.

காதல் என்பது அன்பு. அன்பு அன்பு மட்டுமே. 

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.