LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்!

சுடாத தீநாக்கில்
சுட்டதாய் அழும் மனதிற்கு
தொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்;

தொட்டாலும்
தீ பட்டாலும்
இதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும்
இனிது இனிது; காதல்
என்றும் இனிது இனிதே..

கண்கள் சிமிட்டி
காடெரிக்கும் போதையில்
கண்ணீர் திரட்டி
தலையணை நனைந்து
தலைமயிர் கொட்டி
தாடி வளர்ந்து
வீடு அழுது
ஊர் விரட்டி
ஒதுங்கியே பைத்தியமாய் திரிந்தாலும்
உள்ளே இனிக்கும் காதல்; ஒய்யாரமாய்
சிரிக்கும் காதல்,

ஆயிரம் மயில் கடந்தாலும்
அடுத்த வீட்டை அடைத்தாலும்
கொடுத்த சாமி உயிர்க் கேட்டு பிரித்தாலும்
காலத்திற்கும் – கசப்பின்றி இனிக்கும்
காதல் காதல் இனிதே; இனிதே காதல்..
 
பார்க்க நினைக்கும்
நித்தம் தவிக்கும்
பேச துடிக்கும்
பேசாமலே வலிக்கும்
வெறும் பார்வை கூசும்
லேசாக தொடும் உடம்பினாலும் உள்ளே
தீபம் ஒளிரும்,

இதழ் இனிக்கும்
இருமனம் சேர்ந்த ஒவ்வொரு தருணமும்
ருசிக்கும்,
 
தினிக்கும் ஜாதி
மிரட்டும் மதம்
மறுக்கும் பெற்றோர் எல்லோரையும் விடும்
விடயியலா இடத்தில் நின்று – மனது
அழும் அழும்; காதலுக்கு மட்டுமே அழும்

விழும் விழும் கண்ணீர் விழும்
விழும் அத்தனையும் இனிக்கும்; அத்தனை இனிது காதல்!!


- வித்யாசாகர்!

by Swathi   on 27 Feb 2015  2 Comments
Tags: காதல் இனிது   Lovers Day Kavithaigal   Vidyasagar Kadhal Kavithaigal   Kadhal Inithu   காதலர் தின சிறப்பு கவிதைகள்   வித்தியாசாகர் கவிதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்! காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்!
நிழலுக்கு முன் நீ - வித்யாசாகர் நிழலுக்கு முன் நீ - வித்யாசாகர்
கருத்துகள்
21-Dec-2015 02:06:58 vairamoorthi said : Report Abuse
இனிமையான கவிதை ,எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .
 
10-Mar-2015 23:54:37 பாலமுருகன் said : Report Abuse
அனுபவத்தின் உச்சியில் நின்று வாசிப்பவரின் மனதில் சில்லென சில்லாய்க்க வைக்கும் அமுத வரிகள்.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.