LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

காதலன்

இரு இதயங்கள் இதமாய் பேசும்

இரு இமைகளும் இதமாய் உரசும்!



பல கனவுகள் தினம் வந்து திண்ணும்

புது நினைவுகள் ஏதோ பண்ணும்!



சுட்டு விரலுடன் விரல் வந்து கோதும்

இரு விழியுடன் விழிகள் மோதும்!



புது மழை வந்து இதயம் நனைய

பல சுகம் வந்து நெஞ்சம் நிறையும்!



காற்றினில் அவன் வரும் வாசம்

பல கவிதைகள் கொஞ்சிப் பேசும்!



உயிர்ககாதலைச் சொல்லப் போனால்

என் உதட்டினில் வார்த்தைகள் மறையும்!



அவன் சிறிப்பினில் புதுவித நேசம்

அவன் பார்வையில் பலவித பாசம்!



அவன் அருகினில் நெருங்கிடும் போது

என் உணர்வினுள் வேர்விடும் சுவாசம்!



அவன் ஒரு இலக்கியக் காதலன்

என்னைக் கவிதை வரிகளில் நிறைத்தவன்!



அவன் ஓர் அழகிய ஓவியன்

என்னை விழிகளால் வரைபவன்!



உயிருக்குள் உயிர் தந்த இனியவன்

மனதிற்குள் வேர் விட்ட புதியவன்!



என் காதல் செடியினில் மலராய்

என் இதயத்தில் பூத்தக் காதலன்!



இனி இடைவெளி இடமின்றித் துடிக்க

புது உணர்வுகள் உரசித் தவிக்க

பல கவிதையில் அவனை விதைக்க

காதலை சொல்வேன் தன்னை மறக்க!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: காதலன்   Kadhalan   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Kadhalan Kavithai   Kavithai about Kadhalan  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.