LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சித்தர் பாடல்கள்

கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு

 

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சரணங்கள்
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5
நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9
மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை 
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10
மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11
கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17
பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19
ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20
ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21
எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22
இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24
வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27
போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29
பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31
எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32
கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33
எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

 

பல்லவி

 

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

பாபஞ்செய் யாதிரு மனமே.

 

சரணங்கள்

 

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி

தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?

கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

 

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத்த திவிசு வாசம் - எந்த

நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

 

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறிமாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

 

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

 

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

சொத்துகளிலொரு தூசும் நில்லாதே

ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

 

நல்ல வழிதனை நாடு- எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

 

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட

பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

 

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

 

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே

இச்சைய துன்னையாளாதே - சிவன்

இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

 

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை 

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

 

மெய்குரு சொற்கட வாதே - நன்மை

மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே

பொய்க்கலை யால்நடவாதே - நல்ல

புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

 

கூடவருவ தொன்றில்லை - புழுக்

கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை

தேடரு மோட்சம தெல்லை - அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

 

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

முந்தி வருந்திநீ தேடு - அந்த

மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

 

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை

ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்

கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

 

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்

கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?

பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல

பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

 

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்

போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்

மெய்யாக வேசுத்த காலம் - பாரில்

மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

 

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்

சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;

அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்

ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

 

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்

பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி

சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

 

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர

மானந்தத் தேவியின் அடியிணை மேவி

இன்பொடும் உன்னுட லாவி - நாளும்

ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

 

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்

கான வழியை யறிந்து நீகொண்டு

சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி

சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

 

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்

தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்

வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

 

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை

எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து

வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த

வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

 

இந்த வுலகமு முள்ளு - சற்றும்

இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு

செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்

சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

 

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே!

மையவிழி யாரைச் சாராதே - துன்

மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

 

வைதோரைக் கூடவை யாதே: - இந்த

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே

வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை

வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

 

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்

தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே

தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல

சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

 

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்

பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே

வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்

வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

 

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்

புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;

சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்

தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

 

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி

காட்டி மயங்கிய கட்குடி யாதே!

அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி

அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

 

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த

பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்

சத்திய மென்றதை யீட்டி - நாளும்

தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

 

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்

சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்

ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்

ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

 

எவ்வகை யாகநன் னீதி - அவை

எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி

ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்

ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

 

கள்ள வேடம் புனையாதே - பல

கங்கையி லேயுன் கடன் நனையாதே

கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு

கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

 

எங்கும் சுயபிர காசன் - அன்பர்

இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

துங்க அடியவர் தாசன் - தன்னைத்

துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

 

by Swathi   on 25 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
26-Apr-2020 13:32:23 Tiyaa said : Report Abuse
It was such priceless lyric.Every human should read and follow that . Pls provide with the meaning for each paragraph.It will be very helpful in understanding every words.Thank you
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.