LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கையுறைப் பாவைக்கூத்து

பொம்மைக்கூட்டில் கையை நுழைத்து பொம்மையை ஆட்டி நிகழ்த்தப்படும் கலை கையுறைப் பாவைத்கூத்து எனப்படும். பொம்மைக் கூட்டில் வலது கையை நுழைத்து, பொம்மையின் இரு கைகளிலும் பெருவிரலையும், நடுவிரலையும் நுழைத்தும், பொம்மையின் தலையில் ஆட்காட்டி விரலை நுழைத்தும் பொம்மையை இயக்குவது இதன் செய்முறையாகும். பொம்மலாட்டக் கலையைப் போன்றே திரைச் சீலையின் மேல்பகுதியிலேயே பொம்மைகள் இயக்கப்படுகின்றன. இக்கலையானது மூன்று தலைமுறைக்கு முற்பட்டது எனத் தெரியவருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் இக்கலை நிகழ்கிறது. இக்கலையை ஒரு ஆண் மட்டுமே நிகழ்த்துகிறார். இக்கலையை நிகழ்த்துவதற்கென சில நியதிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. அதாவது கலையை நிகழ்த்துபவர் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்றும் அவர் கலைநிகழ்த்துவதற்கு ஒரு வாரம் விரதம் இருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: கையுறைப் பாவைக்கூத்து   கையுறைப் பாவை   Kaiyurai Paavai   Kaiyurai Paavai Koothu           
 தொடர்புடையவை-Related Articles
கையுறைப் பாவைக்கூத்து கையுறைப் பாவைக்கூத்து
கைச்சிலம்பாட்டம் கைச்சிலம்பாட்டம்
கருத்துகள்
15-Nov-2016 07:15:50 hp said : Report Abuse
It's very nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.