|
|||||
காஜு கத்லி |
|||||
தேவையானவை : பிஸ்தா பருப்பு- ஒரு கைப்பிடி முந்திரி - இரண்டு கப் பால் பவுடர் - 1 கப் பால் - சிறிது ஐஸிங் சர்க்கரை - 2 கப் மில்க் மெய்ட் - சிறிது ஏலக்காய் பொடி- சிறிது குங்குமப்பூ - சிறிது
செய்முறை: 1.முதலில் முந்திரியை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். அத்துடன் பால் பவுடர், ஐஸிங் சர்க்கரை மூன்றையும் கலந்து எடுத்து கொள்ளவும் 2.சுடுநீரில்பிஸ்தா பருப்பை ஊற வைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி பால் ஊற்றி அதில் குங்குமப் பூ சேர்த்து குழைத்துக் கொள்ளவும். 3.மற்றொரு பாத்திரத்தில் முதலில் கலந்து வைத்த கலவை, குங்குமப்பூ பால், மில்க் மெய்ட் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பதத்திற்கு பிசையவும். 4.சப்பாத்திக் கல்லில் இந்த மாவை இடும்போது அதில் ஐஸிங் சர்க்கரையையும், பிஸ்தா துண்டுகளையும் துவி சப்பாத்தியை விட சற்று தடிமனாக தேய்த்து தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். சுவையான, காஜு கத்லி தயார். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|