|
||||||||
ககர அகர வருக்கம் |
||||||||
கலையெனும் பெயரே கல்வியு நூலு
மானி னேறு மகர விராசியும்
மதியின் பங்கு மரத்தின் சுவடு
மாண்முகப் பெயருங் கால நுட்பமும்
புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்
பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349
கரமெனும் பெயரே கையுங் கழுதையும்
கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350
கழியெனும் பெயரே காலைக் காலமு
மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351
கவியெனும் பெயரே கவிவல் லோனும்
குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்
வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352
கவையெனும் பெயரே கவருங் காடும்
எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்
பூர நாளும் புகலப் பெறுமே. ....354
களிறெனும் பெயரே யத்த நாளும்
எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்
யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்
கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்
சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு
மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்
கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்
துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்
வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359
கணமெனும் பெயரே கால நுட்பமும்
உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்
நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362
கடியெனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்
விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்
பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363
கழுதெனும் பெயரே காவற் பரணும்
வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்
குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்
நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368
கனமெனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்
கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்
மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்
விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்
புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373
கயினி யெனும்பெயர் அந்த நாளும்
விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374
கடமெனும் பெயரே யானைத் திரளும்
மற்றதன் கொடிறு மதமும் கானமும்
யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்
நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும்
எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்
துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்
வட்ட வடிவு மலையின் பக்கமும்
படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்
கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்
முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379
கணியெனும் பெயரே மருத நன்னிலமும்
வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்
கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382
கடையெனும் பெயரே கதவு முடிவும்
இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383
கறையெனும் பெயரே கருமையு முரலுங்
குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்
துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்
கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்
கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்
அணிகலச் செப்பும் அச்சு மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே
பகர்ந்தனர் புலவர். ....388
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது
கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்
கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்
நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்
கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392
கல்லெனும் பெயரே யருவியு மோசையும்
மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்
தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்
தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்
மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397
கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்
துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்
கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்
பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே
வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்
முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்
எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்
தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்
வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்
அம்பின் பெயரு மாகு மென்ப. ....415
கவடெனும் பெயரே புரோசக் கயிறும்
மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு
பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்
திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்
தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்
தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்
பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்
இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்
இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்
கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்
சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்
காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441
கலுழி யெனும்பெயர் கானி யாறும்
கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்
கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்
காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447
களப மெனும்பெயர் யானைக் கன்றும்
கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்
இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்
துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்
கசையும் பல்லியப் பெயருங் கலணையுந்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452
கழங்கெனும் பெயரே வேல னாடலுங்
கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்
உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்
ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்
சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்
நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458
கலையெனும் பெயரே கல்வியு நூலு மானி னேறு மகர விராசியும் மதியின் பங்கு மரத்தின் சுவடு மாண்முகப் பெயருங் கால நுட்பமும் புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும் பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349
கரமெனும் பெயரே கையுங் கழுதையும் கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350
கழியெனும் பெயரே காலைக் காலமு மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351
கவியெனும் பெயரே கவிவல் லோனும் குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும் வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352
கவையெனும் பெயரே கவருங் காடும் எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும் பூர நாளும் புகலப் பெறுமே. ....354
களிறெனும் பெயரே யத்த நாளும் எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும் யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங் கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ் சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு மழிவிலாப் பொருளுங் குமரி யாறும் கற்றாழை யினொடு கன்னி யிராசியுந் துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும் வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359
கணமெனும் பெயரே கால நுட்பமும் உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும் திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும் நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும் சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந் துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362
கடியெனும் பெயரே காவலும் விரைவும் அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும் விளக்கமும் புதுவையு மணமு முடுகலும் பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363
கழுதெனும் பெயரே காவற் பரணும் வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும் தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும் சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங் குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும் நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368
கனமெனும் பெயரே மேகமும் பாரமும் தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும் முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும் கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும் மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும் விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும் புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373
கயினி யெனும்பெயர் அந்த நாளும் விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374
கடமெனும் பெயரே யானைத் திரளும் மற்றதன் கொடிறு மதமும் கானமும் யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும் நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும் எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும் துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும் வட்ட வடிவு மலையின் பக்கமும் படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும் கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும் முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379
கணியெனும் பெயரே மருத நன்னிலமும் வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும் கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382
கடையெனும் பெயரே கதவு முடிவும் இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383
கறையெனும் பெயரே கருமையு முரலுங் குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந் துண்டமு மெய்புகு கருவியும் வாளுங் கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும் இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும் கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும் கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும் அணிகலச் செப்பும் அச்சு மணியும் வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே பகர்ந்தனர் புலவர். ....388
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும் கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும் மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும் நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும் கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392
கல்லெனும் பெயரே யருவியு மோசையும் மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந் தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந் தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும் மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397
கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும் வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந் துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும் கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும் கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும் பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும் முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும் எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும் தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும் பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும் வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும் வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும் அம்பின் பெயரு மாகு மென்ப. ....415
கவடெனும் பெயரே புரோசக் கயிறும் மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும் பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும் திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும் தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந் தத்துவ விகற்பமு நிறையறி கருவியும் பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும் தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும் இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும் இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும் தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும் தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும் கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும் வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும் சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன் சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும் காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441
கலுழி யெனும்பெயர் கானி யாறும் கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும் விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும் கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும் காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும் நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும் களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447
களப மெனும்பெயர் யானைக் கன்றும் கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ் சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும் இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும் பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந் துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும் கசையும் பல்லியப் பெயருங் கலணையுந் தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும் விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452
கழங்கெனும் பெயரே வேல னாடலுங் கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும் உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும் ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின் சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும் நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|