LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ககர அகர வருக்கம்

 

கலையெனும் பெயரே கல்வியு நூலு
மானி னேறு மகர விராசியும்
மதியின் பங்கு மரத்தின் சுவடு
மாண்முகப் பெயருங் கால நுட்பமும்
புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்
பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349
கரமெனும் பெயரே கையுங் கழுதையும்
கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350
கழியெனும் பெயரே காலைக் காலமு
மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351
கவியெனும் பெயரே கவிவல் லோனும்
குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்
வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352
கவையெனும் பெயரே கவருங் காடும்
எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்
பூர நாளும் புகலப் பெறுமே. ....354
களிறெனும் பெயரே யத்த நாளும்
எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்
யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்
கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்
சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு
மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்
கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்
துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்
வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359
கணமெனும் பெயரே கால நுட்பமும்
உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்
நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362
கடியெனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்
விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்
பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363
கழுதெனும் பெயரே காவற் பரணும்
வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்
குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்
நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368
கனமெனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்
கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்
மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்
விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்
புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373
கயினி யெனும்பெயர் அந்த நாளும்
விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374
கடமெனும் பெயரே யானைத் திரளும்
மற்றதன் கொடிறு மதமும் கானமும்
யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்
நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும்
எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்
துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்
வட்ட வடிவு மலையின் பக்கமும்
படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்
கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்
முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379
கணியெனும் பெயரே மருத நன்னிலமும்
வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்
கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382
கடையெனும் பெயரே கதவு முடிவும்
இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383
கறையெனும் பெயரே கருமையு முரலுங்
குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்
துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்
கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்
கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்
அணிகலச் செப்பும் அச்சு மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே 
பகர்ந்தனர் புலவர். ....388
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது
கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்
கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்
நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்
கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392
கல்லெனும் பெயரே யருவியு மோசையும்
மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்
தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்
தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்
மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397
கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்
துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்
கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்
பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே
வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்
முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்
எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்
தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்
வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்
அம்பின் பெயரு மாகு மென்ப. ....415
கவடெனும் பெயரே புரோசக் கயிறும்
மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு
பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்
திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்
தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்
தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்
பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்
இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428 
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்
இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்
கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்
சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்
காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441
கலுழி யெனும்பெயர் கானி யாறும்
கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்
கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444 
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்
காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447
களப மெனும்பெயர் யானைக் கன்றும்
கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்
இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்
துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்
கசையும் பல்லியப் பெயருங் கலணையுந்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452
கழங்கெனும் பெயரே வேல னாடலுங்
கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்
உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்
ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்
சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்
நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458

 

கலையெனும் பெயரே கல்வியு நூலு

மானி னேறு மகர விராசியும்

மதியின் பங்கு மரத்தின் சுவடு

மாண்முகப் பெயருங் கால நுட்பமும்

புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348

 

கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்

பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349

 

கரமெனும் பெயரே கையுங் கழுதையும்

கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350

 

கழியெனும் பெயரே காலைக் காலமு

மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351

 

கவியெனும் பெயரே கவிவல் லோனும்

குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்

வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352

 

கவையெனும் பெயரே கவருங் காடும்

எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353

 

கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்

பூர நாளும் புகலப் பெறுமே. ....354

 

களிறெனும் பெயரே யத்த நாளும்

எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்

யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355

 

கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்

கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்

சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356

 

கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு

மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்

கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்

துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357

 

கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358

 

கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்

வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359

 

கணமெனும் பெயரே கால நுட்பமும்

உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்

திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360

 

கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்

நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்

சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361

 

கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்

துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362

 

கடியெனும் பெயரே காவலும் விரைவும்

அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்

விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்

பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363

 

கழுதெனும் பெயரே காவற் பரணும்

வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364

 

கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்

தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்

சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365

 

கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்

குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366

 

கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367

 

கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்

நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368

 

கனமெனும் பெயரே மேகமும் பாரமும்

தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்

முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369

 

கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்

கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370

 

கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்

மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371

 

ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்

விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372

 

கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்

புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373

 

கயினி யெனும்பெயர் அந்த நாளும்

விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374

 

கடமெனும் பெயரே யானைத் திரளும்

மற்றதன் கொடிறு மதமும் கானமும்

யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்

நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும்

எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375

 

கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்

துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376

 

கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்

வட்ட வடிவு மலையின் பக்கமும்

படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377

 

கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்

கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378

 

கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்

முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379

 

கணியெனும் பெயரே மருத நன்னிலமும்

வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380

 

கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381

 

களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்

கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382

 

கடையெனும் பெயரே கதவு முடிவும்

இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383

 

கறையெனும் பெயரே கருமையு முரலுங்

குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384

 

கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்

துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்

கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்

இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385

 

கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்

கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386

 

கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்

கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்

ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387

 

கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்

அணிகலச் செப்பும் அச்சு மணியும்

வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே 

பகர்ந்தனர் புலவர். ....388

 

கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது

கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்

கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389

 

கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்

மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390

 

கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்

நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391

 

கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்

கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392

 

கல்லெனும் பெயரே யருவியு மோசையும்

மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393

 

கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394

 

கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்

தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395

 

கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்

தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396

 

கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்

மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397

 

கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398

 

கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்

வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399

 

கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்

துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400

 

கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401

 

கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402

 

கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்

கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403

 

கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்

கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404

 

கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405

 

கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்

பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406

 

கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே

வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407

 

கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்

முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408

 

கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்

எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409

 

கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்

தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410

 

கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்

பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411

 

கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்

வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்

கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412

 

கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்

வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413

 

கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414

 

சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்

அம்பின் பெயரு மாகு மென்ப. ....415

 

கவடெனும் பெயரே புரோசக் கயிறும்

மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416

 

கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்

பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417

 

கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு

பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418

 

கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்

திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419

 

கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்

தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420

 

கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்

தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்

பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421

 

கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422

 

கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423

 

கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424

 

களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425

 

கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்

தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426

 

கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427

 

கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்

இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428 

 

கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429

 

கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்

இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430

 

கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்

தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431

 

கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432

 

கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்

தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433

 

கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434

 

களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்

கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435

 

கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்

வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436

 

கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்

சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437

 

கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438

 

கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439

 

கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்

சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440

 

கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்

காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441

 

கலுழி யெனும்பெயர் கானி யாறும்

கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442

 

கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்

விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443

 

கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்

கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444 

 

கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்

காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445

 

கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்

நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446

 

கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்

களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447

 

களப மெனும்பெயர் யானைக் கன்றும்

கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448

 

கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்

சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449

 

கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்

இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450

 

கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்

பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்

துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்

கசையும் பல்லியப் பெயருங் கலணையுந்

தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451

 

கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்

விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452

 

கழங்கெனும் பெயரே வேல னாடலுங்

கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453

 

கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்

உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454

 

கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455

 

கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்

ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456

 

கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்

சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457

 

கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்

நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.