LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ககர ஓகார வருக்கம்

 

கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். ....596
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும்
அம்பும் பூமியும் அறலுங் கிரணமும்
சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும்
மலையும் பதவும் வானமு மிரக்கமும்
குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். ....597
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும்
வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும்
குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. ....598
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும்
இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். ....599
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும்
கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும்
குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். ....600 
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும்
புவனியு மெனவே புகன்றனர் புலவர். ....601
கோடெனும் பெயரே மலையின் குவடும்
வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும்
மரத்தின் பணையு மூதுங் கொம்பும்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....602
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும்
பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்
ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. ....603
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும்
ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. ....604
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ்
சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும்
மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். ....604
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். ....606
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும்
குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. ....607
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. ....608
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும்
சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். ....609
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும்
பூவின் றட்டும் புகலப் பெறுமே. ....610
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும்
மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். ....611
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும்
பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். ....612
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும்
அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். ....613
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்
ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும்
அங்குச முங்கூன் வாளு மாமே. ....615
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும்
ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. ....616
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும்
மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். ....617
கோலெனும் பெயரே யாழி னரம்பும்
அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும்
அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும்
குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும்
இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். ....618

 

கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும்

குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். ....596

 

கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும்

அம்பும் பூமியும் அறலுங் கிரணமும்

சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும்

மலையும் பதவும் வானமு மிரக்கமும்

குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். ....597

 

கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும்

வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும்

குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. ....598

 

கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும்

பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும்

இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். ....599

 

கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும்

கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும்

குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். ....600 

 

கோத்திர மெனும்பெயர் குடியு மலையும்

புவனியு மெனவே புகன்றனர் புலவர். ....601

 

கோடெனும் பெயரே மலையின் குவடும்

வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும்

மரத்தின் பணையு மூதுங் கொம்பும்

சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....602

 

கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும்

பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்

ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. ....603

 

கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும்

ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. ....604

 

கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ்

சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும்

மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். ....604

 

கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். ....606

 

கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும்

குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. ....607

 

கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்

சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. ....608

 

கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும்

சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். ....609

 

கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும்

பூவின் றட்டும் புகலப் பெறுமே. ....610

 

கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும்

மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். ....611

 

கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும்

பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். ....612

 

கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும்

அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். ....613

 

கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்

ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614

 

கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும்

அங்குச முங்கூன் வாளு மாமே. ....615

 

கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும்

ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. ....616

 

கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும்

மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். ....617

 

கோலெனும் பெயரே யாழி னரம்பும்

அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும்

அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும்

குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும்

இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். ....618

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.