|
||||||||
ககர ஓகார வருக்கம் |
||||||||
கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். ....596
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும்
அம்பும் பூமியும் அறலுங் கிரணமும்
சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும்
மலையும் பதவும் வானமு மிரக்கமும்
குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். ....597
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும்
வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும்
குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. ....598
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும்
இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். ....599
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும்
கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும்
குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். ....600
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும்
புவனியு மெனவே புகன்றனர் புலவர். ....601
கோடெனும் பெயரே மலையின் குவடும்
வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும்
மரத்தின் பணையு மூதுங் கொம்பும்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....602
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும்
பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்
ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. ....603
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும்
ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. ....604
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ்
சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும்
மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். ....604
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். ....606
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும்
குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. ....607
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. ....608
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும்
சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். ....609
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும்
பூவின் றட்டும் புகலப் பெறுமே. ....610
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும்
மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். ....611
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும்
பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். ....612
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும்
அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். ....613
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்
ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும்
அங்குச முங்கூன் வாளு மாமே. ....615
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும்
ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. ....616
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும்
மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். ....617
கோலெனும் பெயரே யாழி னரம்பும்
அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும்
அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும்
குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும்
இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். ....618
கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும் குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். ....596
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும் அம்பும் பூமியும் அறலுங் கிரணமும் சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும் மலையும் பதவும் வானமு மிரக்கமும் குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். ....597
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும் வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும் குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. ....598
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும் பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும் இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். ....599
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும் கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும் குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். ....600
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும் புவனியு மெனவே புகன்றனர் புலவர். ....601
கோடெனும் பெயரே மலையின் குவடும் வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும் மரத்தின் பணையு மூதுங் கொம்பும் சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....602
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும் பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும் ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. ....603
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும் ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. ....604
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ் சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும் மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். ....604
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். ....606
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும் குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. ....607
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும் சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. ....608
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும் சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். ....609
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும் பூவின் றட்டும் புகலப் பெறுமே. ....610
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும் மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். ....611
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும் பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். ....612
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும் அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். ....613
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும் ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும் அங்குச முங்கூன் வாளு மாமே. ....615
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும் ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. ....616
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும் மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். ....617
கோலெனும் பெயரே யாழி னரம்பும் அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும் அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும் குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும் இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். ....618
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|