LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கக்கன் கக்கன்ஜி ஆனார்

தேசியக் காங்கிரஸ் தொடங்கி எழுபது ஆண்டுகள் நிறைவுறும் ஆண்டான 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டைச் சென்னையில் நடத்த கட்சி முடிவு செய்தது . தமிழகத்தின் மாநிலத் தலைவரான கக்கன் அவர்களுக்கு அம்மாநாடு நடத்தும் பொறுப்பினைத் தந்தது . அன்றைய தமிழக முதல்வர் காமராசர் கொடுத்த ஊக்கத்தாலும் உறுதுணையாலும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன . சென்னை ஆவடியில் 21.1.1955 முதல் 23.01.1955 வரை நடைபெற்ற இம்மாநாடு , இதோ ஒரு திறன்மிக்க நிர்வாகி என்று கக்கனின் திறமையை அடையாளம் காட்டியது . அந்தத் தேசிய அளவிலான மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் நேரு பெருமகனார் ஆவார் .

நேரு , கக்கனை அழைக்கும் போதெல்லாம் கக்கன்ஜி (‘ ஜி’ என்பது ‘அவர்கள்’ என்பதன் இந்தி வடிவமாகும் ). என்றே அழைத்தார் . அவர் தந்த ‘ஜி’ என்ற அடைமொழி பிற தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் கக்கன்ஜி என்றே அழைக்கத் தொடங்கினர் . மாநாடு நடத்திய விதத்தைப் பாராட்டிய நேருஜி , தரையில் அமர்ந்து மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த பூசாரிக் கக்கனிடம் வந்து நலன் விசாரித்து விட்டு மேடைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

நேரு அவர்களால் அழைக்கப்பட்ட ‘கக்கன்ஜி’ என்ற அப்பெயர் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மக்களாலும் இன்றும் அழைக்கப்படுகின்றன .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.