LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

களமெழுத்தும் பாட்டும்

தெய்வம் வீற்றிருக்கும் இடத்தின் கோவிலில் முன்பகுதியில் உள்ள பரந்த இடத்தில் தெய்வத்தின் உருவத்தை வண்ணப்பொடிகளால் வரைவதும், அத்தெய்வத்தைப் போற்றிப் பாடுவதும் ஆகிய இரு கூறுகளைக் கொண்டது களமெழுத்தும் பாட்டும் ஆகும். இக்கலையில் காளி படத்தை வரைவது பெருவழக்காக உள்ளது. இப்படத்தை கலை வெளிப்பாடாக மட்டுமின்றி காளியாகவே கருதுகின்றனர். இக்கலையானது கேரளத்தில் பரவலாக நிகழ்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலிலும், பத்மநாபபுரம் கோவிலிலும் இக்கலை முன்பு நிகழ்ந்தது. இப்போது கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் உள்ள கோவில்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை நிகழ்த்தும் கலைஞருக்கு வயது வரம்பு இல்லை. பெண்கள் இக்கலையை நிகழ்த்துதல் கூடாது என்றும் உள்ளது. மூத்த கலைஞரே களத்தில் படம் வரைவதாகவும், சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு, படம் வரைந்த மூத்த கலைஞரே அதனை அழிக்கவும் உதவுவதாகவும் உள்ளது. இக்கலைஞர்கள் இதனைத் தொழிலாகச் செய்யவில்லை.  இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவதாகவும், குறைந்த ஊதியமே இக்கலைக்குக் கலைஞர்கள் பெற்றுக் கொண்டாலும் கோவிலைச் சார்ந்தவர்களால் மதிப்புடன் நடத்தப்படுகின்றனர். அதனால் இக்கலை நலிந்து விடாமல் இன்றும் வாழ்கிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: களமெழுத்தும் பாட்டும்   களம்   Kalam   Kalameluththum Paattum           
 தொடர்புடையவை-Related Articles
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உரை, மேரிலாந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உரை, மேரிலாந்து
வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில... வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன் அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது - கவிஞர் மகுடேசுவரன்
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கூதிர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் - 35 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கூதிர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் - 35
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கார்காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க  வழக்கங்கள் - 34 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கார்காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் - 34
நல்ல காலம்  - வே.ம.அருச்சுணன் - மலேசியா நல்ல காலம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.