கழியல் ஆட்டம் என்பது ஆடலும் பாடலும் ஒருங்கிணையுமாறு நிகழ்த்தப்படும் கலை. இது போர்க்கலை, தற்காப்புக் கலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. கம்பு என்ற பொருளைத் தருவதால் இது கழியல் ஆட்டம் எனப் பெயர்பெற்றது. இதனை களியல், களியலாட்டம், கழலடி, களல், கழியல் என்று பல்வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. இவ்வாட்டத்தை நாடார், பறையர், பரதவர், அருந்ததியர், ஈழவர், பிலையர் ஆகிய சாதியினர் நிகழ்த்துகின்றனர். இக்கலையானது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.கழியல் ஆட்டக்கலைஞர்களைப் பாராட்டிப் பரிசுகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் ஆடும் 'வசந்தன் ஆட்ட'த்திற்கும் இக்கலைக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.
|