LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

கல்லறை நெருஞ்சிகள்

'அவர்கள்' கூறுகிறார்கள் -
எங்களை நெருஞ்சிகள் என்று.
நெருஞ்சி விதை தூவியதே
அவர்கள் தான்.
பிறகென்ன நித்திய
கல்யாணியா முளைக்கும்?

அவர்களின் மொழி படிக்காமல்
ஓய்வு பெற்ற அப்பா -
வாழ்வின் பொருளாதார
அத்திவாரம் ஆடியதால்
நிரந்தர ஓய்வு பெற,
அவருடன் எம் வசந்தங்களும்
புதைக்கப்பட்ட போதே...
நெருஞ்சிகள் விதைக்கப்பட்டன.

உழைத்து ஓடான
அம்மாவின் நம்பிக்கை,
அண்ணாவின் வரம்பில்லாக்
கற்பனைகள் -
தரப்படுத்தப் பட்டு
தரைமட்டமான போது...
நெருஞ்சிகள் முளை கொண்டன.

வலைவீசி மீன் வா¡¢
'ட்றக்'குள் போட்டு
அடித்துதைத்து உடல் நொ¢த்துக்
கருவாடாக்கி
கதறக் கதறக் கற்பழித்து,
கைவேறு கால் வேறு
உடல்கள் வேறாய்
மண் உண்ட தீயணைத்த
சடலங்கள் மீதில்
சிறு நெருஞ்சி தலைநிமிர்ந்து
கிளை கொண்டன.

நெருஞ்சிமுள் அவர்காலைக் குத்தும்,
அவருடலைக் கிழிக்கும்,
நெருஞ்சிகள் தாம் முளைத்த
கல்லறையின் பக்கலில்
அவர்கட்கும்
நிலையான சமாதிகளைக் கட்டும்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.