LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கல்யாணத்திலும் கதர் பட்டுத்தான்

எனது திருமணம் 1964 சனவரி மாதம் 20 ஆம் நாள் நடைபெறுவதற்குப் பெரியவர்கள் கூடி உறுதி செய்தார்கள் . திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னால் துணிக் கடைக்குச் சென்று இரண்டு பட்டுப் புடவைகள் எடுத்து வந்தேன் . திருமண நாளைக்கு முதல் நாள் மாலை என் தந்தை வீடு வந்ததும் புடவையைக் காண்பிக்கச் சொன்னார் . அம்மாவும் நானும் மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துவந்து காண்பித்தோம் .

‘என்ன இது ! புடவை பள பள என்று இருக்கிறதே ! கதர்ப் புடவை மாதிரி இல்லையே ?’ என்று அப்பா திகைப்புடன் கேட்டார் .

‘இது காஞ்சிபுரம் பட்டுப் புடவை . நிச்சயதார்த்தத்துக்கு மட்டுமே இதைக் கட்டிக் கொள்வேன்’ என்று கூறினேன் .

‘நீ காங்கிரஸ்காரன் பெண் தானே ? நானோ காந்தியவாதி . அவருடைய கொள்கைக்கு உண்மையாக வாழ்பவன் . அதனால் , நீ உடனே கதர்க் கடைக்குச் சென்று , கதிரிலேயே பட்டுப் புடவை எடுத்து வந்து , திருமணத்தில் கட்டிக் கொண்டு மனையில் உட்கார வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் அப்பா .

பிறகு என்ன ! திரும்பவும் கதர்க் கடைக்கே சென்று புடவை எடுத்து வந்து அதை அணிந்துகொண்டுதான் மணமேடையில் அமர்ந்தேன் . எனது மணவிழா , சென்னை - கிரீன்வேஸ் சாலையில் அமைச்சராகிய என் தந்தைக்கு அரசு ஒதுக்கிய வீட்டில் , பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது .

என் அப்பா , தாம் கடைப்பிடித்த காந்தியக் கொள்கையில் கடுகு அளவும் மாறாத உறுதி பூண்டவர் . அதனால்தான் தாம் ஓர் உண்மையான காங்கிரஸ் போராளி என்பதை என் திருமணத்திலும் நிரூபித்துக் காட்டினார் .

எளிமை பற்றி நாம் பேசவும் , எழுதவும் தயங்குவதில்லை . ஆனால் , அப்படி வாழத்தான் தயங்குகிறோம் .

– டாக்டர் மு . வ .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.