உத்தம வில்லன், பாப்பநாசம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, கமல் ஹாசன் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
தற்போது இந்த படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது, அந்த தகவலின் படி, ராஜ்குமாரின் பிரபல நாவலான ‘வெல்வெட் குற்றங்கள்’ நாவலையும், தொலைந்துபோன மலேசிய விமான மர்மத்தையும் பின்னி ஒரு கதையாக எடுக்க உள்ளதாகவும் அதில் கமல் நடிக்க உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான முழு படப்பிடிப்பையும் ஒரு தீவில் எடுக்க எண்ணியே கமல் மொரீசியஸ் தீவுகளில் லொகேஷன்கள் தேர்வு செய்துவிட்டு வந்துள்ளாராம். இந்த படத்தின் பெரும்பகுதியை பிரபுதேவாவும், சில பகுதிகளை கமலும் இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரபுதேவா இந்தியில் முன்னனி இயக்குநராக இருந்துவரும் நிலையில் தமிழ் , இந்தி என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
|