LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

காமன் பண்டிகை

இணைய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!


காமன் பண்டிகை என்னும் தலைப்பைப் பார்த்ததும் வாசகர்கள் மத்தியில் சந்தேகம் எழுமென்று நினைக்கிறேன்! தீபாவளி தினத்தன்று அப்பண்டிகையைப் பற்றிக் கூறாமல், வேறு ஏதோவொரு (அந்த மாதிரிப்) பண்டிகையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறானே என்று எண்ண வேண்டாம். காமன் பண்டிகைக்கும் இன்றைய இளசுகள் கொண்டாடும் காதலர் தினத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை!!!!


காமன் பண்டிகை என்பது தமிழர் மரபில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வரும் பண்டிகைகளுள் ஒன்று. இன்றும் தென் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இப்பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  பண்டிகையின் நிறைவின் போது தெருக்கூத்தும் நடத்தப்படும். இத்தகு காமன் விழாவைப் பற்றி நம் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் குறிப்புகளைக் காணமுடியும்.

காமன் விழா/பண்டிகையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் ’காமன்’ அதாவது ’மன்மதனைப்’ பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு மன்மதனென்று நான் குறிப்பிட்டது பீப்பாடல் புகழ் நடிகர் அன்று; தேவர்களுள் ஒருவரான காமதேவன் ஆவார். இன்னும் சரியாகச் சொன்னால் ரதியின் கணவர்; திரைப்படங்களில் தலைவன் அல்லது தலைவி மீது காம பாணமெய்து, அவர்களிருவருக்கும் இடையில் காதல் மலரச் செய்வாரே அவர்தான் ’காமன்’.

தேவர்களுள் அழகில் மிகுந்தவன், காம தெய்வன், கொஞ்சுங்கிளி வாகனமும், மகரக் கொடியுடையோன் (1), கரும்பை வில்லாக்கி அதில் ரிங்காரமிடும் வண்டுகளை நாணாக்கி  ஐந்து மலரால் (2) செய்த அம்பினை எய்தும் வடிவுடையோனே மன்மதனாவான். மன்மதனுக்குக் கோயில் கட்டி வணங்கியிருப்பதும் தமிழர் வழக்கிலிருந்துள்ளது.

மன்மதனுக்கென்று பேராயுதங்கள் எதுவுமன்று, ஐம்மலராலான மெல்லிய அம்புதான் அவன் ஆயுதம், அவ்வாயுதத்தால் வீழ்ந்தோர் தப்பியதில்லை!

சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு பார்வதிதேவியால் அனுப்பப்பட்ட மன்மதன் தன்னிடமிருந்த காமக்கணையை அவரை நோக்கித் தொடுப்பார். தனது தவத்தைக் கலைத்ததால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார். இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரண்டு, தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள். கோபம் தணிந்த சிவன் ரதியின் நிலையைப் புரிந்து அவள் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். பின்னர் மன்மதன் உயிர்த்தெழுந்து சிவபெருமானை வழிபடுதலே காமன் பண்டிகையாகும். 

      (1)   மகரக்கொடி – மீன் கொடி     (2) ஐந்து மலர்கள் - தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம் (அல்லி??).

by varun   on 04 Nov 2016  0 Comments
Tags: காமன் பண்டிகை   Kaman Pandigai                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.