நேர் வந்து நின்றேன் - என்னை
நெருப்பாய் எரித்தாய்!
உயிர்தரத் துணிந்தேன் - நீ
உதறியே தள்ளினாய்!
உன்னையே நினைத்தேன் - என்னைப்
பார்வையால் வெறுத்தாய்!
கனவிலே மிதந்தேன் – ஏன்
கண்ணீரை விதைத்தாய்!
இனி பொழுதும் உன் நினைவே - தினம்
கண்களில் உன் கனவே!
என்னிடம் தினமும் பேசுவாய் - என்
கவிதையில் வரிகளாய்!
தினம் உன் சிரிப்புச் சப்தம் – என்
கண்களில் துளிகளாய்!
இனி உன் நினைவோடு வாழ்கிறேன் – என்னைக்
கனவோடு கலக்கிறேன்!