LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கண்மூடிய காமராசருடன்

மாலை மூன்றுமணியளவில் இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் வருகிறார் என்ற பதட்டமும் காவல் துறை அதிகாரிகளின் கெடுபிடியும் அதிகமானது . இருந்தாலும் கக்கனை மட்டும் எவரும் எதுவும் சொல்லாமல் மரியாதையோடு நடத்தினர் . இந்திரா அம்மையார் வந்ததும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டாக வேண்டும் என்ற ஆசையைத் தம்பி விஸ்வநாதனிடம் கூறினார் . அந்தப் பரபரப்பான சூழலில் எவரிடம் உதவிகேட்பது என்று தெரியாமல் விஸ்வநாதன் திகைத்துக் கொண்டிருந்தார் .

இந்திராகாந்தி அம்மையார் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பினார் . அப்போது அங்கு இருக்கையில் அமர்ந்திருக்கும் கக்கனைப் பார்த்து “இவர் யார் ?” ( Who is this gentleman ) என்று ஆங்கிலத்தில் கேட்டார் . கக்கனை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்ததே இதற்குக் காரணம் . பக்கத்தில் இருந்தவர்கள் கக்கனைப் பற்றி ஒர் அறிமுகம் கொடுக்க , ‘ ஒ அவரா’ என்ற சொல்லோடு கிளம்பிவிட்டார் . அந்தச்சோகச்சூழலில் அவர் கேட்டதே பெரியதுதான் . அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இந்திராகாந்தி அம்மையாரோடு இருந்தார் . இந்திராகாந்தி அம்மையார் காரில் ஏறப்போகும் சமயத்தில் முதல்வர் கலைஞரை அழைத்துத் தமது காரில் ஏறிக்கொள்ளும்படி கூறினார் . க ‘ac¬ ஞர் தம் உதவியாளரை அழைத்து ‘நான் அம்மையார் காரில் செல்கிறேன் . நீ அங்கு அமர்ந்திருக்கும் கக்கன் அவர்களை நமது காரில் அழைத்துக் கொண்டு வந்துவிடு’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் . கலைஞர் பணித்தபடியே முதல்வரின் மகிழுந்தில் ஏறிக் காமராசரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் கக்கன் .

அந்தப் பரபரப்பான சூழலில் , தலைமை அமைச்சர் கூடவே செல்லும் அவசர நிலையிலும் , கக்கன் கவனிப்பாரற்று அமர்ந்திருப்பதை உணர்ந்த கலைஞர் தாமே முன்வந்து உதவிய கனிவான உள்ளத்தை இன்றும் கக்கனின் தம்பிகளும் பிள்ளைகளும் நன்றியோடு நினைவு கூறி மகிழ்கிறார்கள் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.