|
|||||
காப்பரிசி |
|||||
தேவையானவை : வெல்லம் – 2 கப் பச்சரிசி – 2 கப் நிலக்கடலை – 200 கிராம் பொட்டுக் கடலை - 200 கிராம் கொப்பரைத் தேங்காய் வெள்ளை எள் – 50 கிராம் நெய் - தேவைகேற்ப ஏலப்பொடி
செய்முறை: 1.பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து உலர்த்திக் கொள்ளவும். 2.வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை உடைத்துக் கொள்ளவும்.கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும். 3.சிறிது நெய்யில் எள், கொப்பரைத் துண்டுகளை பொரித்துக் கொள்ளவும்.வெல்லத்தை பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும், 4.ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும்.காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும். |
|||||
by Swathi on 21 May 2012 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|