|
|||||
கார்த்திகை அப்பம் |
|||||
தேவையானவை : வெல்லப்பொடி - 1/2 - 3/4 கப் வரை அரிசிமாவு - 1 கப் நன்கு பழுத்த வாழைப்பழம் - 1 ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: 1.முதலில் ஒரு பத்திரத்தில் வெல்லத்தை 1/2 கப் தண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.நன்கு கனிந்த வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். 2.மசித்த வாழைப்பழம்,அரிசிமாவு, தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். . 3.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும். |
|||||
by sridevi on 21 May 2012 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|