|
||||||||
கருக்கல் |
||||||||
அந்தப் பெரிய கரிய வாயகன்ற
சூட்டு மலைகளுக்குள்
பேயுறையும் சூட்டு மலைகளுக்குள்
சூரியன் போய்
ஒரு சப்பாணி மாதிரி உட்கார்ந்து கொள்ளும்.
வானமெல்லாம் என்னுடைய
இதயத்தைப் பிழிந்த குருதி
வியாபித்துக் கிடக்க,
இரவுப் பறவைகளில் நாலைந்து
புறதானம் காட்டித் திரிந்தாலும்....
தலையாலே நெடுத்த
உலக்கை விழுங்கித் தென்னைகளின் மீது
இரத்தம் உறைந்து
முகம் செத்து
காகங்கள் விக்கிவிக்கித் துக்கிக்கும்.
யார் அந்த
மேகத்தைப் பிடித்து
ஓடாமல் சும்மா பனியுறைந்த தடம்போல
கிடக்கச் சொல்லியது?
இடைக்கிடை வீசுகின்ற காற்றில்
பூ கழன்று கொட்ட
அவளது ஞாபகம்,
அந்தக் குதிரைவால் கூந்தல்
அமசடக்குக்காரி தலையினில் முடிகின்ற
சின்ன மலர்களின் சாயல்
எல்லாம் மனக்கண்ணில் வந்துவந்து நிற்க,
நான்
மேலும் பலதடவை வானத்தை ஆராய்வேன்...
திசையறி கருவியும் காட்டாத அந்த
திசையில் தெரிகின்ற இருண்ட கண்டத்தில்
இன்னும் ஒரு வெள்ளி முளைக்கின்ற சாத்தியம்
இல்லை.
ஏனிந்த இருள்?
அந்தப் பெரிய கரிய வாயகன்ற சூட்டு மலைகளுக்குள் பேயுறையும் சூட்டு மலைகளுக்குள் சூரியன் போய் ஒரு சப்பாணி மாதிரி உட்கார்ந்து கொள்ளும்.
வானமெல்லாம் என்னுடைய இதயத்தைப் பிழிந்த குருதி வியாபித்துக் கிடக்க,
இரவுப் பறவைகளில் நாலைந்து புறதானம் காட்டித் திரிந்தாலும்.... தலையாலே நெடுத்த உலக்கை விழுங்கித் தென்னைகளின் மீது இரத்தம் உறைந்து முகம் செத்து காகங்கள் விக்கிவிக்கித் துக்கிக்கும்.
யார் அந்த மேகத்தைப் பிடித்து ஓடாமல் சும்மா பனியுறைந்த தடம்போல கிடக்கச் சொல்லியது?
இடைக்கிடை வீசுகின்ற காற்றில் பூ கழன்று கொட்ட அவளது ஞாபகம், அந்தக் குதிரைவால் கூந்தல் அமசடக்குக்காரி தலையினில் முடிகின்ற சின்ன மலர்களின் சாயல் எல்லாம் மனக்கண்ணில் வந்துவந்து நிற்க,
நான் மேலும் பலதடவை வானத்தை ஆராய்வேன்...
திசையறி கருவியும் காட்டாத அந்த திசையில் தெரிகின்ற இருண்ட கண்டத்தில் இன்னும் ஒரு வெள்ளி முளைக்கின்ற சாத்தியம் இல்லை. ஏனிந்த இருள்?
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|