|
|||||
காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: பா.ஜ.க. அபார வெற்றி! |
|||||
ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தெற்கு காஷ்மீரில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலை, முக்கியக் கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகள் புறக்கணித்து உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான நகர உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் 17, 20, 24, 27, 29, டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் நடைபெற்ற நகராட்சிப் பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்டத் தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் லே பகுதியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு காஷ்மீரில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அனந்தநாக், குல்காம், புல்வாமா, சோபியான் ஆகிய நான்கு மாவட்டங்களும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 20 நகராட்சிகளை பாஜக கைப்பற்றும் சூழல் உள்ளது. சோபியான் நகராட்சியில் 12 வார்டகளிலும், தேவ்சர் நகராட்சியில் மொத்தமுள்ள 8 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குவாசியா காட் நகராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. பகல்காம் நகராட்சியில் 8 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது. 4 மாவட்டங்களிலும் காங்கிரஸ் 28 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. |
|||||
by Mani Bharathi on 20 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|