LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கட்சிப் பொறுப்பேற்ற கக்கன்

 அவர் செய்து கொண்டிருந்த உண்மையான பொதுத் தொண்டும் சமுதாய வளர்ச்சிப் பணிகளும் மக்களால் மட்டுமல்லாமல் கட்சியின் தலைவர்களாலும் மதிக்கப்பட்டன ; அடையாளம் கண்டு கொள்ளப்பட்டன . அதன் விளைவால் மேலூர் வட்டக் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவி இவரைத் தேடி வந்தது . அவரும் 12.07.1940 ஆம் நாள் அந்தப் பொறுப்பேற்றார் . தாம் பொறுப்புடன் நடத்தி வந்த இரவுப்பள்ளியையும் விட்டு விடாமல் தொடர்ந்து கவனித்து வந்தார் .

முதல் சிறைவாசம்

அப்போது செல்லுமிடமெல்லாம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லி நாட்டுப்பற்றை மக்களிடையே ஏற்படுத்துவதையும் , கட்சிக்கொடி நாட்டி , வந்தே மாதரம் ( மாநிலத்தாயை வணங்குகிறேன் என்று பொருள் ) என்று முழங்குவதையும் அவர்தம் முக்கியப் பணிகளாகக் கொண்டிருந்தார் . இதைக் கண்காணித்து வந்த ஆங்கில அரசு 1940- ஆம் ஆண்டு செப்டம்பர் 14- ஆம் நாள் வாஞ்சி நகரம் என்ற ஊரில் கக்கனைக் கைது செய்தது . வந்தே மாதரம் என்று முழங்கியமைக்காகவும் துண்டு அறிக்கைகளைப் பொதுமக்களிடம் வழங்கியமைக்காகவும் 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் . இதுவே இவர் பெற்ற முதல் சிறைத் தண்டனையாகும் .

சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானதும் இயக்கப் பணிகளில் மிகவும் ஆர்வம் காட்டினார் . ஆங்கில அரசை எதிர்த்து மேடைகளில் பேசுவதும் கட்சித்தலைமை கொடுக்கும் இரகசிய ஆணைகளை நடைமுறைப்படுத்துவம் இவர்தம் செயற்பாடுகளாக இருந்தன . அதன் விளைவாக அவ்வட்டார இளைஞர்கள் கக்கனின் தலைமையில் அணி திரண்டு விடுதலை இயக்கத்தில் சேர்ந்தனர் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.