LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

கற்பொடு புணர்ந்த கவ்வை

செவிலி பாங்‍கியை வினாதல்.
340.
பொன்னங் கொடியொன்று தானடந் தேவரல் போல்வருமென்
அன்னந் தனியெங்ங னுற்றது பொற்றொடி யாய்நடஞ்செய்
மன்னம் பலவர் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
தன்னந் தனிநின்று நீயென்கொல் வாடித் தளர்கின்றதே. 1

பாங்கி செவிலிக் குணர்த்தல்.
341.
கடுத்தார் மனநம் மினத்தாரன் னேபின்னுங் காதன்மணம்
தடுத்தா ரதனிற் கலைசைத் தியாகர் தமதருளால்
வடுத்தான் படாமற் சுரத்தெரி யாற்றி மலரொருநாள்
கொடுத்தா னொருவன்பின் னேநடந் தாளுன் குலக்கொழுந்தே. 2

பாங்கியின் உணர்ந்த செவிலி தேற்றுவோர்க்கு
எதிரழிந்து மொழிதல்.
342.
ஓராட்டி பாகர் கலைசைத் தியாக ருயர்வரைமேல்
நீராட்டி யென்முலை யூரமு தூட்டியெந் நேரமுநான்
சீராட்டி யேந்தி வளர்த்ததற் கோவெனைத் தேவ்விற் கண்டென்
ஏராட்டி விட்டகன் றாளாறு மோவெனக் கித்துயரே. 3

செவிலி தன் ‍அறிவின்மைதன்னை நொந்துரைத்தல்.
343.
பிரிவைக் கருதிக் கலைசைத் தியாகர் பெருவரைமேற்
பரிவைப் பெருக்கியன் னேயென் றழைத்துப் பழகுமிந்த
அரிவைக்குப் பாலையல் லாற்குடி யாதென் றறைந்துமெள்ளத்
தெரிவித் தகன்றன ளாற்பேதை யேதுந் தெரிந்திலனே. 4

செவிலி ‍தெய்வம் வாழ்த்தல்.
344.
முடி‍கொண்டு நின்னடி போற்றுவ லென்செல்லன் முற்றுமறக்
கடிகொண்ட காளைபின் சென்றாளை மீட்டின்று காட்டுதியால்
படிகொண்ட கீர்த்திக் கலைசைத் தியாகர் பணிவரைமேற்
குடிகொண் டிருந்தென்று மெங்களைக் காக்குங் குலதெய்வமே. 5

செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்.
345.
ஒருகயந் தள்ளி யொருகயம் வீழ்ந்தெடுத் தோனிருக்க
அருகய லார்க்குக் கொடுப்பான் றனைநினைந் தார்களென்றே
திருகய நெஞ்சத்தர் காணாக் கலைசைத் தியாகர்வெற்பிற்
பொருகயற் கண்ணவ ளன்னே விடலைபின் போயினளே. 6

நற்றாய் பாங்கிதன்னொடு புலம்பல்
346.
நோக்கிநல் லாள்கருத் தீதென்றுன் னோடு நுவன்றவந்த
வாக்கினை யெங்கட் குணர்த்தா தனத்தை வனத்தவமே
போக்கினை யேதென் கலைசைத் தியாகர் பொருப்பிலெங்கள்
மூக்கினைச் சுட்டு விரல்சேர வைத்தழ முற்றிழையே. 7

நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல்
347.
கரத்திற் கபாலர் கலசத் தியாகர் கலைசையென்மான்
வரத்தின்மிக்கானொருவள்ளல்கைத்தார்பெற்று வாய்மைகுன்றா
துரத்திற் சிறந்தொரு தெய்வந் தொழாத வுறுதிபெற்றாற்
சுரத்திற் றுணிந்துட னேகவும் வேண்டுங்கொ றோகையரே. 8

நற்றாய் அயலார்தம்மொடு புலம்பல்
348.
அகத்தார்க் கரியர் கலைசைத் தியாக ரளித்தருள்சண்
முகத்தான் றிருமுன் வரங்கிடந் தியான்பெற்ற மொய்குழலாள்
சுகத்தாறு காட்டவல் லானொரு வன்பின் சுரத்திலிவ்வூர்
நகத்தா னகன்றன ணட்டாற்றுச் சா‍யென நானையவே 9

நற்றாய் தலைமகள்பயிலிடந்தம்மொடு புலம்பல்
349.
திருந்தேற் கருளுஞ் சிதம்பர வீசர் திருக்க‍லைசைப்
பெருந்தேவு யன்னவென் பெண்விளை யாடும் பெருஞ்செயலாய்
குருந்தே குருக்கத்தி மண்டப மேயுங் குளிர்ந்தநிழல்
இருந்தே பிரிந்தவ ணாங்காண வென்றுவந் தெய்துவளே 10

நிமித்தம் போற்றல்
350.
அரைவா யரவர் கலைசைத் தியாக ரமர்ந்தவெள்ளி
வரைவாய் மரையி னிணப்பலி யென்று மகிழ்ந்திடுவேன்
இரைவாய் நிறைய வெடுத்துண்ண லாமின்றெ னேழைவரக்
கரைவா யிருகட் கொருமணி யைங்குணக் கார்க்கொடியே 11

நற்றாய் சுரந்தணிவித்தல்
351.
நாரமில் லாவெஞ் சுரநாடு பாலிநன் னாடெனலாய்
வாரங் கலைசைத் தியாகேச வுன்றன் வலக்கண்ணினாற்
கோரஞ்செய் யாமற் குளிர்விக்க வேண்டுங் குடங்கொண்முலைப்
பாரம்பொறாதிடை தள்ளாடச் செல்லுமென் பைந்தொடிக்கே. 12

நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல்.
352.
அஞ்சத்த னப்பர் கலைசைத் தியாக ரரணடுவான்
அஞ்சத்த மாமறை சொன்னசெவ் வாயெழு மந்நகைபோல்
அஞ்சத் தழல்செ யடவிவெங் கற்றிரட் காற்றினவோ
அஞ்சத் திறகும் பொறாதவென் பேதை யடிமலரே 13

நற்றாய் தன்மகள் இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கல்.
353.
பாவா யுறுகுழல் போற்கரந் தேகும் படிபுலவோர்
பாவாய் கலைசைத் தியாகர்நன் னாட்டிற் பயின்றதெங்கென்
பாவா யழேலென்று முத்தன்ன மூட்டியுன் பாதமண்ணிற்
பாவாய் நடந்து வராயென்று கொஞ்சுமென் பைங்கிளியே. 14

நற்றாய் தன்மகள் அச்சத்தன்மைக்கு அச்சமுற் றிரங்கல்.
354.
நீர்த்தண் சுனைத்த வளைதத்தி னஞ்சுமென் னேரிழையாள்
தீர்த்தன் கலைசைத் தியாகேசன் வெற்பினிற் செல்லிடிபோல்
ஆர்த்தஞ் சனமத மாயா முறித்துண்ண லச்சுரத்திற்
பார்த்ததிர் வுற்று வெரூஉமென்றெ னெஞ்சம் பதைக்கின்றதே 15

ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர் காதலின் இரங்கல்.
355.
புரகர ரெங்கள் கலைசைத் தியாகர் பொருப்பிடையாம்
பரிதவிக் கத்துறந் தாளென்று பாங்கியர் பஞ்சினைவார்
விரகறி தன்மக ளின்சொற் பயிற்றிய மென்கிளிதான்
அரகர வென்னநற் றாயழல் சேர்மெழு காயிடுமே. 16

செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்.
356.
மஞ்சிவர் மன்றமுஞ் செய்குன்ற முஞ்செறி வண்கலைசை
நஞ்சினை மாந்துங் கலசத் தியாகர் நடஞ்செய்பதத்
தஞ்சிலம் போசை படர்தரு மெல்லை யளவுஞ்சென்றுன்
வஞ்சியைத் தேடிக் கொணர்வேன் வருந்தல் வருந்தலன்னே. 17

ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்.
357.
வான்மூன்று நூலர் கலைசைத் தியாகர் வரையிலெங்கள்
மான்மூன்று சத்தி யுடையா னொருவன்பின் வன்மரங்கள்
நான்மூன்று ராசியுந் தோயுங் கடத்தி னடந்தனளோ
கோன்மூன்று கொண்டு குறும்பொரு மூன்றுங் குமைத்தவரே. 18

மிக்கோர் ஏதுக்காட்டல்.
358.
வேயுங் கரும்பும் புரைநெடுந் தோளி வினைப்பயனாற்
காயுங் கனியும் பருவத் தருந்துநர் கைப்படுமால்
தீயு மறியுங்கைக் கொண்டார் கலைசைத் தியாகர்வெற்பில்
ஆயும் பொழுதுமின் னாருமந் நீர்மைய ரன்பினர்க்கே. 19

செவிலி எயிற்றியொடு புலம்பல்.
359.
துகளேத நீக்குங் கலைசைத் தியாகர் சுடர்க்கிரிமேல்
உகளேறு போலு மடலோர் விடலைபின் னூறுமினி
யகளேயும் பூமின்புற் பற்கோத்த தாலி யணியுமெயின்
மகளேயிப் பாலைவந் தப்பால் நடந்த வழியுரையே. 20

செவிலி குரவொடு புலம்பல்.
360.
கூசாம லேதிலன் பின்னேக லென்றொன்று கூறலின்றிப்
பேசாத பாவையைப் பெற்றன மென்ற பெருங்குறையால்
வேசாறி யோவெங்கள் பாவையை நீவிலக் காமல்விட்டாய்
தேசார் கலைசைத் தியாகேசர் வெற்பிற் செழுங்குரவே. 21

செவிலி சுவடுகண் டிரங்கல்.
361.
பிஞ்சு நிலாவணி செஞ்சடை யாரென் பிழைமலங்கள்
அஞ்சுங் கழித்த கலைசைத் தியாக ரசலத்தினான்
கொஞ்சுங் கிளியனை யாளடி யுங்குவை கூர்வடமேற்
றுஞ்சு மவனனை யானடி யேயிச் சுவடுகளே. 22

செவிலி கலந்துடன்வருவோரைக் கண்டு கேட்டல்.
362.
கம்மேக வண்ணனுஞ் செய்யாளும் போல்வந்து காட்சிதந்தீர்
இம்மே தகநும்முன் போயின ரோநல் லெழிற்கலைசைச்
செம்மேனி பூசும்வெண் ணீற்றான் சிதம்பர தேவன்வெற்பில்
அம்மே னகையனை யாளு மொருசிலை யாளியுமே. 23

கலந்துடன்வருவோர் புலம்பல் தேற்றல்.
363.
கண்டகங் கொண்டென் னெதிர்வந்த மேகமுங் காதலென்மான்
கண்டதொர் மின்னுங் கணிக்கிலன் னேயொண் கரியமணி
கண்டன் சிதம்பர வீச னுதற்கட் கனறருகான்
கண்டகண் டண்ணுற வேகல சாபுரி காண்பர்களே. 24

செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்.

364.
தெரிதமி ழார்ந்த கலைசைத் தியாகரைச் சேர்கிலர்போல்
எரிதரு கான்றிரிந் தெய்த்தவென் கால்கலந் தேகுநரைத்
துரிதம தாக்கண்டு கண்டுகண் புற்கென்ற சூரியர்க்கும்
அரிதரி தாலினிக் காணநம் மாதை யருஞ்சுரத்தே. 25

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.