LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

வாலியின் புகழ் வாழியவே.....!

தமிழைக் கற்றவருக்கு

ஆயுள் நீளம் என்பார்

உன் நாவில் விளையாடியது

தேன் சிந்தும் தமிழ் அல்லவா.....!

 

மனம் குளிர்ந்த தமிழன்னை

உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்

82 அகைவையிலும் இளசுகளின்

உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த

வாலிபக் கவிஞன் நீ...........!

 

அற்புதக் கவிகளால்

கவியரசு கண்ணதாசன் மனம்

கவர்ந்த கவிஞனே

கலைஞர் காவியம் பாடியக்

காவியக் கவிஞனே

உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு

காவையத்தைச் செதுக்கி இருக்க முடியாது..............!

 

பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்

தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி

பாடல்களின் பிரம்மனே

வாலியின் பெயரே உனை

சிகரத்தில் நிறுத்தியது

மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது.........!

 

நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை

பத்தாயிரம் பாடல்கள் தந்து

தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்

கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்............!

 

இரவும் பகலும் உன்

கடும் உழைப்பை கண்டு உன்னிடம்

இயற்கை உன்னிடம் தலை வணங்கியது

உழைப்பே மனிதனை உயர்த்தும்

என்பதற்கு  ஓர் உதாரணம்

தன்னம்பிக்கையின் சக்ரவர்த்தி நீ.........!

 

சோதனைகளைச் சாதனையாக்கிய

கவிஞ்சனே பல்லாண்டுகள் இன்னும்

வாழ்வாய் என்ற கணக்கில்

மண் விழுந்து விட்டதே

தரைமேல் பிறக்க வைத்த இறைவன்

எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.........!

 

 

நீ மறைந்தாலும்

உன் வைர வரிகள் பல்லாண்டுகள்

எங்களை வாழவைக்கும்

வாழியவே உன் புகழ்.............!

by Swathi   on 29 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.