|
|||||
வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி |
|||||
வளர்ச்சி வேண்டும்; பெரு மலர்ச்சியும் வேண்டும்! வனங்களை அழித்து வளர்ச்சியை வேண்டேன்! உயர்ச்சி வேண்டும்; அருமுயற்சியும் வேண்டும்! அகிலத்தை சிதைத்து அயர்ச்சியை வேண்டேன்!.
நேர்மையும் வேண்டும்; அதில் நியாயமும்வேண்டும்! மனங்களை அழிக்கும் வேற்றுமை வேண்டேன்! தூய்மையும் வேண்டும்; மிக்க துணிவும் வேண்டும்! மதங்களை துதிக்கும் மனங்களை வேண்டேன்!
தலைமை வேண்டும்; அங்கே துணிவும் வேண்டும்! சொல்லாடல் கொண்ட வாய் சொல் வேண்டேன்! பெருமை வேண்டும்; புது எழுச்சியும் வேண்டும்! அல்லாடல் தீண்டும் வாழ்வுதனை வேண்டேன்!
எழுச்சி வேண்டும்; நல்புரட்சியும் வேண்டும்! வல்லாடல் ஏற்கும் வெறியாளன் வேண்டேன்! எல்லாமும் வேண்டும்; எல்லார்க்கும் வேண்டும்! அல்லாரை ஏத்தும் வல்லானை வேண்டேன்! |
|||||
VAENDUN-VAENDEN (WANT -DON'T WANT) - D.KRISHNAMURTHY | |||||
by D.Krishnamurthy on 13 Sep 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|