உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, வெள்ள நிவாரணங்களை பார்வையிட வந்த பிரதமரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதாவது, உத்தரகண்ட் மாநிலம் வரலாறு காணாத சேதத்தை கண்டுள்ளது, தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவை இமாலயச் சுனாமி என்று கூறலாம். கேதார்நாத் சிவன் கோவில் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், கோவிலைச் சுற்றிலும் பெருமளவில் இடிபாடுகள் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவதற்காண பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணிகளை முடிக்க குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும். எனவே, இன்னும் ஓராண்டுக்கு இக்கோவில் மூடப்படும். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள இயலாது என உத்தரகண்ட் முதல்வர் தெரிவித்தார்.
|