சென்னை, டிச. 15- சென்னையில் டாக்டர் குமரேசன், நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
டாக்டர் குமரேசன் ஆதிகாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை அளித்து, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார்.
இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சைப் பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையை அவர் 2 பேருக்கு சொல்லிகொடுத்து இருப்பதாக கூறினார். அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும்.டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும்.
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மருத்துவ துறையில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். டாக்டர் மருத்துவர் குமரேசன் மூலம் ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ அறிவியல் கழக தலைவர் டாக்டர்கமலி ஸ்ரீபால், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்’ கழகத்தின் தலைவர்லியோனி, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் ஜோதிமணி, தலைவர் டாக்டர்கள் சொக்கலிங்கம், காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மற்றும் திரு.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
|