கீழடி அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் அகழாய்வு பணித் தொடங்கியது. கரோனா ஊரடங்கால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பணிகள் நடைபெறவில்லை. மே மாத இறுதியில் பணிகள் மீண்டும் தொடங்கின. இதில் எலும்புக் கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், உறைகிணறு, பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு பணிகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ள நிலையில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதனை எடுத்த குழிகள் உள்ளிட்டவைகளை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழிகளை ஹெலிகாம் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
|