கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை சிவப்பு பாசி மணிகள்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடிப் பகுதி தமிழரின் நாகரிகப் பழமை மற்றும் சிறப்பினை உலகிற்கு வெளிப்படுத்தும் வரலாறு நிறை தொல்லியல் களமாக திகழ்கிறது. கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் பகுதிகளில் இதுவரை பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அகரத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முகம்,விலங்கு பொம்மை கண்டெடுக்கப்பட்டன. கீழடியின் தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்ட இருந்ததும் கண்டறியப்பட்டது. கீழடியில் மிகுதியான கலைப் பொருட்கள் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடக்கும் அகழாய்வில் சிகப்பு பச்சை நிறத்திலான பாசிமணிகள், யானையின் தந்தத்தினாலான செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் பல தொல்லியல் பொருட்கள் இங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|