கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு, வெம்பக்கோட்டை,துலுக்கர்பட்டி,பெரும்பாலையில் முதல்கட்ட ஆய்வு
தமிழர் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ளும் வகையில் பழமையும் நாகரிகச் செழுமையும் சொல்லும் பொருட்கள் கீழடி மற்றும் தற்போது அகழாய்வு நடைபெறும் மற்ற அனைத்து பகுதிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன. உலக வரலாற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்று பகுதிகளையும், தடயங்களையும் தமிழர் பகுதி கொண்டிருப்பது தெளிவுறத் தெரியவந்துள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்த போது கீழடி, கொந்தகை,அகரம் ஆகிய பகுதிகளில் 8-வது அகழாய்வுப் பணியும்,அரியலூர்- கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி- மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வு மற்றும் விருதுநகர்- வெம்பக்கோட்டை, திருநெல்வேலி- துலுக்கர்பட்டி,தருமபுரி- பெரும்பாலை ஆகிய இடங்களில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படஇருப்பதை தெரிவித்தார். தொல்லியல் பணிக்கான நிதித் தொகையாக ஏழு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
|