LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சமூக பிரச்சனைகள் குறித்து பொது விவாதம் நடத்த வருமாறு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு !!

டெல்லியில் நிலவி வரும் சமூக பிரச்சனைகள் குறித்து, பொது விவாதம் நடத்த, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

 

டெல்லியில் நிலவும் மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற அடிப்படை பிரச்சினைகளை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒன்றில் பேசிய, டெல்லி முதல்வர், ஷீலா தீட்சித், டெல்லியில் நிலவும் பிரச்னைகைள் குறித்து பொது விவாதம் நடத்த தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, பொது விவாதம் நடத்த வருமாறு முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், பொது விவாதத்தை தொலைக்காட்சி அரங்கங்களில் நடத்தாமல், டெல்லி ராம்லீலா மைதானம் அல்லது வேறு பொது இடங்களில் நடத்த வேண்டும். அப்போது தான் இந்த விவாதத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு நேரடியாக கேள்விகள் கேட்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், முதல்வர் அனுமதி அளித்தால், பா.ஜனதா முதல்வர் வேட்பாளரான ஹர்சவர்தனையும் நாம் அழைக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: பொது விவாதம்   ஆம் ஆத்மி   அரவிந்த் கெஜ்ரிவால்   டெல்லி முதல்வர்   சமூக பிரச்சனைகள்   ஷீலா தீட்சித்   Kejriwal  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை.. தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை..
2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் 2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ? 49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ?
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.