LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

துணிக்கடைகள்-வணிக நிறுவன ஊழியர்கள் உட்கார்ந்த படியே வேலை செய்ய அனுமதிக்கும் கேரள அரசின் அவசர சட்டம்!

துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கும் அனுமதியை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் கேரள அரசால் இயற்றப்பட்டு உள்ளது.


நாட்டிலேயே இது முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்று உள்ளது. இந்தச் சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது.

1960-ம் வருடத்திய 'கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்வதற்கு அனுமதி கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம் கழிவறைக்கு செல்லக் கூட அனுமதி கிடைப்பது இல்லை. 

வாடிக்கையாளர் இல்லாத நேரத்திலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் பல ஊழியர்கள் உடல் நல பாதிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானார்கள்.
இந்த நிலையில் பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு கேரள மாநில ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்து உள்ளது. புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் உட்கார்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 1960ஆம் ஆண்டு சட்டத்தின் 29வது பிரிவின்படி முதல் முறை விதி மீறும்போது, 5,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை அபராதமும், இரண்டாவது முறை விதி மீறும் போது பத்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து விதிமுறையை மீறும்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை அளிக்கவும் வழிவகை செய்து உள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 28 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.