கேல் ரத்னா-2021
கேல் ரத்னா விருதுப் பட்டியலில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். கேல் ரத்னா என்பது விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். விளையாட்டில் இரத்தினக் கல்லை போன்றவர் என பொருள்படும் இவ்விருது இவ்வாண்டில் (2021) 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என அழைக்கப்பட்டு வந்தது, தற்போது மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது ரூபாய் 25 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படுகிறது.
ஈட்டி எறிதலில் தங்கம் பெற்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தஹியா, குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா, மணிஷ் நார்வல், சமித் அன்டில், பிரமோத் மற்றும் கிருஷ்ணா, ஸ்ரீஜேஷ், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி, இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், அவனி லெஹாரா ஆகியோர் விருதிற்குரிவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
|