லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு தேசிய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன் அறிவித்துள்ளார்.
லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த மொத்தம் 10 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட கிரிஷா நாகராஜ கவுடா, வெள்ளிப்பதக்கம் வென்றார். தனது ஒலிம்பிக் பதக்கத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். தேசிய விளையாட்டு ஆணையத்தில் எனக்கு வேலை தருவதாக, விளையாட்டு அமைச்சர் அஜய் மேக்கன் தெரிவித்துள்ளார். நான் நாடு திரும்பிய உடன் அவரை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.
லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு தேசிய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன் அறிவித்துள்ளார்.லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த மொத்தம் 10 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட கிரிஷா நாகராஜ கவுடா, வெள்ளிப்பதக்கம் வென்றார். தனது ஒலிம்பிக் பதக்கத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். தேசிய விளையாட்டு ஆணையத்தில் எனக்கு வேலை தருவதாக, விளையாட்டு அமைச்சர் அஜய் மேக்கன் தெரிவித்துள்ளார். நான் நாடு திரும்பிய உடன் அவரை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.
|