நிமிர்ந்துநில் படத்தை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரகனி இயக்கம் படம் கிட்ணா.
இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சாட்டை படத்தில் நடித்த மகிமா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
கிட்ணா படத்தின் தலைப்பு குறித்து, சமுத்திரக்கனியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது,
இந்த படம் கெடை ஆடு மேய்க்கிறவர்களைப் பற்றிய கதையாம். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதின கீதாரி என்ற நாவலுக்கு திரைக்கதை அமைத்து கிட்ணா படத்தை இயக்கி வருகிறாராம் சமுத்திரக்கனி.
கீதாரி நாவல் இலக்கிய உலகத்தில் பரவலாக கவனிக்கப்பட்ட கதை. எனவே கீதாரியை மூலக்கதையாகக் கொண்ட கிட்ணா வர்த்தக ரீதியில் மட்டுமல்ல, சர்வதேசஅளவில் பல விருதுகளையும் பெறும் என்கிறார்கள் கிட்ணா படக்குழுவினர்.
|