LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது

 

தமிழக அரசின் இந்த ஆண்​டுக்​கான ‘தகை​சால் தமிழர்’ விருதுக்​கு, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சுதந்​திர தின விழா​வில் அவருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டுச் சான்​றிதழை முதல்​வர் ஸ்டா​லின் வழங்க உள்​ளார்.

தமிழகத்​துக்​கும், தமிழ் இனத்​தின் வளர்ச்​சிக்​கும் பெரும் பங்​காற்​றிய​வர்​களை பெரு​மைப்​படுத்​தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகை​சால் தமிழர்’ என்ற விருது வழங்​கப்​படு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் சங்கரய்யா, நல்​ல​கண்​ணு, கி.வீரமணி, குமரி அனந்​தன் ஆகியோ​ருக்கு இந்த விருது வழங்​கப்​பட்​டது.இந்​நிலை​யில், இந்த ஆண்டு விரு​தாளரை தேர்வு செய்​வதற்​காக அமைக்​கப்​பட்ட குழு​வின் ஆலோ​சனை கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது.
முன்​னாள் முதல்வர் கருணாநி​தி​யின் அன்​புக்​குரிய மூத்த அரசி​யல் தலை​வரும், ‘மணிச்​சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்​லிணக்​கத்​துக்​காக வாழ்​நாளெல்​லாம் உழைத்து வருபவரு​மான கே.எம்​.​காதர் மொய்​தீனுக்கு விருதை வழங்க இக்​கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காதர் மொய்​தீன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் ஆவார். கட்​சி​யின் தமிழ் மாநிலத் தலை​வர், தேசிய பொதுச் செய​லா​ள​ராக​வும் இருந்​தவர். அறி​வார்ந்த சொற்​பொழி​வாளர், மனிதநே​யம், மதநல்​லிணக்​கத்​துக்கு தன்னை அர்ப்​பணித்​துக் கொண்​ட​வர். கோவை​யில் கடந்த 2010-ல் நடந்த உலகத் தமிழ் செம்​மொழி மாநாட்​டில் தமிழகத்​துக்​கும், அரபகத்​துக்​கும் உள்ள தொடர்​பு​கள் பற்​றிய ஆய்வுக் கட்​டுரை வழங்​கிய​வர். ‘தா​ருல் குர்​ஆன்’ இதழில்'தமிழர்க்கு இஸ்​லாம் வந்த மதமா? சொந்​த​மா?' எனும் தலைப்​பில் 8 ஆண்​டு​கள் தொடர் கட்​டுரை எழு​தி​ய​வர். ‘வாழும் நெறி’, ‘குர்​ஆனின் குரல்’, ‘இசுலாமிய இறைக் கோட்​பாடு’ என்​பது உட்பட 6 நூல்​களை எழு​தி​ய​வர்.

வரலாற்றுத் துறை பேராசிரிய​ர்: திருச்சி ஜமால் முகமது கல்​லூரி​யில் 15 ஆண்​டு​கள் வரலாற்று துறை பேராசிரிய​ராக பணி​யாற்​றிய​வர். காயிதே மில்​லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்​லிணக்​கம் பரப்பி வரும் சிந்​தனை​யாளர். பல நூறு பட்​ட​தா​ரி​களை உரு​வாக்கி அவர்​களது வாழ்வை உயர்த்​திய ஆசானும் ஆவார்..." என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. 

 

 

by hemavathi   on 04 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம் நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம்
காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச்  சிறப்பு இணையதளம் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு இணையதளம்
கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள்
விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.