மேற்குவங்க மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தில் உள்ள டம்டம் நகர் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒன்றிலாதாஸ் பள்ளி கழிப்பறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்து கிடந்தார். மாணவர்கள் சிலர் அவரை ராகிங் செய்ததாகவும், பல மணி நேரம் கழிப்பறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். நடந்த தவறுக்காக பள்ளி முதல்வர், மாணவியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். எனினும் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடினர்.
|