கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. ('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)
மணக்குடவர் உரை:
கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கூற்று உடன்று மேல் வரினும்-இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே-கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை-சிறந்த படையாவது. "எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான் பொருளொடும் போகான் சாற்றவும் போகான் தமரொடும் போகான் நல்லா ரென்னான் நல்குர வறியான் தீயா ரென்னான் செல்வரென் றுன்னான் திரியா னொருகணந் தறுக ணாளன்." (கபி. 81.35.41) ஆதலின், உம்மை உழர்வு சிறப்பு. சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல் வலியும் உளவலியும்.
கலைஞர் உரை:
கூற்று உடன்று மேல் வரினும்-இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே-கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை-சிறந்த படையாவது. "எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான் பொருளொடும் போகான் சாற்றவும் போகான் தமரொடும் போகான் நல்லா ரென்னான் நல்குர வறியான் தீயா ரென்னான் செல்வரென் றுன்னான் திரியா னொருகணந் தறுக ணாளன்." (கபி. 81.35.41) ஆதலின், உம்மை உழர்வு சிறப்பு. சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல் வலியும் உளவலியும்.
சாலமன் பாப்பையா உரை:
கூற்று உடன்று மேல் வரினும்-இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே-கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை-சிறந்த படையாவது. "எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான் பொருளொடும் போகான் சாற்றவும் போகான் தமரொடும் போகான் நல்லா ரென்னான் நல்குர வறியான் தீயா ரென்னான் செல்வரென் றுன்னான் திரியா னொருகணந் தறுக ணாளன்." (கபி. 81.35.41) ஆதலின், உம்மை உழர்வு சிறப்பு. சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல் வலியும் உளவலியும்.
Translation
That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.
Explanation
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.