அணு உலைப் பாதுக்காப்பிற்கு 1,500 போலீசு; வெளிமாட்டங்களிலிருந்து 2,500 போலீசு; ஆக மொத்தம் 4,000 போலீசு; ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு; போலீசு உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பு; கடலோரக் காவல் படை; மத்திய உளவுத்துறை; மாநில உளவுத்துறை; விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் கண்காணிப்பு; இவைகளுக்கு நடுவே கூடங்குளம் மக்களின் கடல் வழி முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. 200 படகுகளில் வந்த மக்கள் அணு உலையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். கூடங்குல்ளம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இறுதியாக, தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
|