LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

குக்கர் அல்வா

தேவையானவை :


சீனி -  2 கப்

கோதுமை மாவு - ஒரு கப் 

முந்திரி - 50 கிராம்

கேசரி கலர் -  சிறிது 

நெய் - 2 ஸ்பூன் 

ஆலிவ் ஆயில் - 1 கப் 

 

செய்முறை:-


1.முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அதனுள்  கோதுமை மாவு பாத்திரத்தை வைத்து மூடி கோதுமை மாவை வேகவிட வேண்டும்.


2.ஒரு விசில் சத்தம் வந்த உடன் இறக்கி கோதுமை மாவை வெளியே எடுத்து ஆறவிட வேண்டும்.சூடு  ஆறிய கோதுமைமாவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.


3.ஒரு  வாணலியை அடுப்பில் வைத்து 1/2 டம்ளர் தண்ணீருடன் கேசரிகலர் கலந்து சீனியை சேர்த்து கரையவிட்டு அதனுடன் மிக்சியில் உள்ள மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.  


4.பக்கத்து அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஆலிவ் ஆயில்,நெய் ஊற்றி சூடுசெய்து ,அல்வா கிளறி முடியும்வரை சூடாக இருக்கும்மாறு அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.


5.மாவு லேசாக கெட்டி படும் போது கொதிக்கும் எண்ணெய்யை ஒரு கரண்டியால் எடுத்து மாவின் மேல் ஊற்றி கிளற வேண்டும்.


6.எண்ணெய்யை ஊற்றி கிளற கிளற மாவு எண்ணெய்யை உள்வாங்கும்.


7.அப்பொழுது மாவும் தளதள வென்று பாத்திரத்தில் ஒட்டாமல் கலர் மாறி பளபளப்பாக வரும்.கடைசி கரண்டி எண்ணெய்யை விடும் பொழுது மாவு எண்ணெய்யை உள்வாங்கி கிளற கிளற 2 நிமிடத்தில்மாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்.


8.இந்த பக்குவம் வந்த உடன் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிநெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி  விட வேண்டும்.



by sridevi   on 21 May 2012  1 Comments
Tags: Cooker Halwa   Halwa   Cooker   Sweet Halwa   குக்கர் ஹல்வா   ஹல்வா   குக்கர்  
 தொடர்புடையவை-Related Articles
தினை அல்வா தினை அல்வா
குக்கர் அல்வா குக்கர் அல்வா
கருத்துகள்
22-Oct-2013 06:04:35 KATHIRESH TK said : Report Abuse
Nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.