LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை

 

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து 
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து 
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் 
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559 
துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் 
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் 
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த 
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560 
என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் 
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து 
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த 
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561 
குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப் 
பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச் 
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை 
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562 
பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத் 
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் 
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி 
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563 
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி 
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே 
நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் 
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564 
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய 
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் 
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் 
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565 
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே 
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் 
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை 
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566 
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் 
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் 
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் 
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567 
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் 
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு 
இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் 
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 568 

 

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து 

தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து 

கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் 

ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559 

 

துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் 

செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் 

முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த 

அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560 

 

என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் 

துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து 

முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த 

அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561 

 

குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப் 

பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச் 

செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை 

அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562 

 

பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத் 

தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் 

சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி 

ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563 

 

கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி 

வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே 

நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் 

அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564 

 

மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய 

மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் 

கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் 

கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565 

 

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே 

நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் 

கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை 

அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566 

 

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் 

கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் 

தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் 

ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567 

 

கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் 

செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு 

இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் 

அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 568 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.