LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

குழந்தைகள் ....

அவர்கள்

எதிர்பார்ப்பதெல்லாம் ....


வெறும்

மனிதத் தன்மை ...


யாரும்

புறக்கணிக்காத

மனிதத்தன்மை ....


சிறிது நேரம்

அரவணைத்துப்

பேசுகிற மனிதத்தன்மை ...


உன் அன்பு

பாகிர்ந்துகொள்கிற

உண்மையான

மனிதத்தன்மை ...


ஆலமரமாய்

அவர்களை

அரவணைக்கும்

அந்தக் குடிலுக்குள்

நுழைய நுழைய ...


கொஞ்சம்

கொஞ்சமாய்

ஒடிந்து போனேன் ....


சிறிது சிறிதாய்

சோர்ந்து போனேன் ...


இறை நம்பிக்கை

அறுந்து போகுமோ ...

அதிர்ந்து போனேன் .......


எல்லாம்

குழந்தைகள் ....


வயதுகடந்த

வயதுக்கு மீறிய

குழந்தைகள் ....


சரியாய்

சேலை உடுத்தத்

தெரியாத குழந்தைகள் ...


வேறு வேறு

பாசை பேசுகிற

குழந்தைகள் ...


ஓடி ஆடி

உழைக்க வேண்டிய

வயதில்

ஓய்வெடுக்கிற

குழந்தைகள் ...


நடந்ததும் தெரியாது

நடப்பதும் தெரியாது

மனம் மயங்கிய

குழந்தைகள் ....


பின் புலம்

விசாரித்தேன் .....


தான்

கசக்கப் பட்டதே

தெரியாமல் கசக்கிய

ஒரு சில மலர்கள் ...


பெரும்பாலும்

கல்லெறிபட்ட

ஒரு சில

வெள்ளை மலர்கள் ...


ஆதரவற்று

கைவிடப்பட்ட

மனக்காயம் பட்ட

ஒருசில மலர்கள் ..


பிள்ளைகளால்

புறக்கணிக்கப்பட்ட

வயது முதிர்ந்த

ஒரு சில மலர்கள் ....


எல்லாம்

மலர்கள் ...


வயது கடந்த

குழந்தை மலர்கள் ...


இயற்கை மீது

வருத்தம் வந்தது ...

இறைவன் மீது

கோபம் வந்தது ...


ஏன் இப்படி

ஏன் இப்படி ......


ஓயாத கேள்வி

எனக்குள்

அலையடித்தது ...


யார் காரணம்

யார் காரணம் ......


பதிலில்லாக் கேள்வி

ஏன் மூளை குடைந்தது ...


விடை கிடைக்காத

அவர்கள் வாழ்க்கை

என் கண்ணில்

நீர் கோர்த்தது ...


என் சக

மனிதர்களே ...


உங்களுக்கு முன்

அவர்கள் மானத்தை

முன் வைக்கிறேன் ....


அந்த இறைவனின்

குழந்தைகளை

எங்கேனும் பார்த்தால் ...


மனக் காயம்பட்ட

அந்த மலர்கள் மீது ...


கல்

எரியாதீர்கள் ....


நாமெல்லாம்

மனிதர்கள் ....


அவர்கள்

நம்மிடம்

எதிர்பார்ப்பதெல்லாம் ....


வெறும்

மனிதத்தன்மை .....


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.