|
|||||
கும்மாயம் |
|||||
தேவையானவை : பச்சரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 4 கப் உளுந்தம் பருப்பு – அரை கப் வெல்லம் – 1 கிலோ நெய் – அரை கிலோ செய்முறை:- 1.முதலில் பாசிப் பருப்பு,பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே சிவக்க வறுத்துக் கொண்டு.அவற்றை ஒன்றாகக் கலந்து, மழுமழுப்பாக அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். 2.சலித்து வைத்துள்ள ஒரு டம்ளர் மாவுக்கு ஒரு டம்ளர் வெல்லம், 3 டம்ளர் தண்ணீர், 3/4 டம்ளர் நெய் என்ற விகிதத்தில் கலந்து, கிளறி, தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3.ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்துக் காயும் போது, மாவைப் போட்டுக் கிளறுங்கள்.தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு வேறொரு அடுப்பில் கொதிக்க வைத்து இறக்குங்கள். 4.வெல்லப் பாகை வடிகட்டி முதல் அடுப்பில் நெய்யில் வேகும் மாவு நுரை பொங்கி வரும் போது உற்றவேண்டும்.அது வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் வேளையில் இறக்குங்கள். 5.ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி வைத்தால் கும்மாயம் தட்டில் ஒட்டாது வரும்.நெய் அதிகம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|