LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    வலைத்தமிழ் நிகழ்வுகள் Print Friendly and PDF

வள்ளுவர் கோட்டத்தில் திறக்கப்பட்டுள்ள குறளங்காடிக்கு பெரும் வரவேற்பு

 

கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்  தற்போது ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. நீரூற்று நடனம் உள்ளிட்ட மக்களைக் கவரும் பல்வேறு ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டுள்ளன. முத்தாய்ப்பாக, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே குறளங்காடி என்ற திருக்குறளுக்கேயான பிரத்தியேக வணிக மையம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. 275 சதுர அடிப் பரப்பில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குறளங்காடியில் 5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மதிப்புள்ள திருக்குறள், திருவள்ளுவர் சார்ந்த பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது. 

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவின் போது, திருக்குறளால் வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் முதல்முறையாக குறளங்காடி அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்போது முதல்முறையாக வள்ளுவர் கோட்டத்தில் முதல் குறளங்காடி திறக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர் நிற்கும் சிற்பங்கள், போதிமரத்தில் அமர்ந்திருக்கும் சிற்பங்கள், வள்ளுவர் கோட்டத்தின் சிற்பங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு விலைகளில் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கலைஞரின் குறளோவியம், திருக்குறள் கலைஞர் உரை உள்படத் தமிழில் திருக்குறள் சார்ந்து வெளிவந்துள்ள நூல்கள், பல்வேறு மொழி பெயர்ப்புகள், திருக்குறளுக்கேயான பிரத்தியேகமாக இயங்கும் வலைத்தமிழ் பதிப்பகத்தின் வெளியீடுகள், வள்ளுவர் படம் போட்ட பைகள், திருக்குறள் ஸ்டிக்கர்கள், திருக்குறள் பண்பாட்டுக் கையேடு, திருக்குறள் அலங்காரப் பதாகைகள், ஓவியங்கள், கைவினைப் பொருள்கள், ஓலைச்சுவடிகள், நாட்குறிப்புகள், வள்ளுவர் மற்றும் திருக்குறள் அச்சிடப்பட்ட பேனாக்கள், எழுதுகோல்கள், தொப்பிகள், ஆயத்த ஆடைகள், வள்ளுவ நெறியை விளக்கும் சிறார் நூல்கள் என ஏராளமான பொருள்கள் இந்த குறளங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்க வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த குறளங்காடிக்குச் சென்று பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள். 

"குறளங்காடி  மாவட்டம் தோறும் அமைக்கப்படும். இத்தகைய பொருட்கள் வெளிநாடுகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும். இணையதளம் வாயிலாகவும் இப் பொருட்களைப் பெறலாம். கடைகளின் வழியாகவும் கைவினைப் பொருட்கள்,  பரிசுப் பொருட்கள் தயாரிப்பு வழியாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். மக்கள் பரிசுப் பொருட்களாகவும், நூல்களாகவும், அலுவல் பரிசுப் பொருட்களாகவும் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார் குறளங்காடியின் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி. 

 

by hemavathi   on 29 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் செய்தி: உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் செய்தி:
தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள். தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள்.
வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம் வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம்
வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி. வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி.
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது
சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு.. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு..
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.