LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 5- பகுதி 1- குறலோடு உறவாடு - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி - மனிதக் குலத்தின் ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க : 5- பகுதி 1- குறலோடு உறவாடு - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி - மனிதக் குலத்தின் ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள்

அறிமுகம்:

    கோவை மாவட்டம் வள்ளலூரில் பிறந்தவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள். தனது 17வது வயதிலிருந்து ஆசிரியர் பணியைச் செய்து வருகிறார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். பதிப்புத்துறை இயக்குநராகவும், தமிழ் இலக்கியத்துறை பேராசிரியராகவும், மொழித்துறை தலைவராகவும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் நிலை ஆய்வறிஞராகவும் திகழ்ந்தவர்.

மாணவர்களுக்கு வழிகாட்டல்:

    தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ருசியா, அமெரிக்கா, போலந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் அயல் நாட்டு மாணவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார். 260க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 450 கருத்தரங்கங்களில் கலந்து கொண்டுள்ளார். 46 மாணவர்கள் இவரது வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 55 மாணவர்கள் எம்ஃபில் பட்டம் பெற வழிகாட்டியுள்ளார்.

பெற்ற விருதுகள்:

    தமிழிலக்கியத்தில் மானிடவியல் பாவைகள், சிவாதரம் செம்பதிப்பு, திருக்குறள் கலைக்களஞ்சியம் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். தமிழக அரசின் ‘திருக்குறள் நெறித் தோன்றல்’ விருதினை பெற்றுள்ளார். ஸ்ரீராம இலக்கிய கழகத்தின் திருக்குறள் விருதினை பெற்றுள்ளார். திருச்சி திருக்குறள் பேரவை வழங்கிய ‘குறள் ஞாயிறு’ விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இளமைப்பருவம்:

    கோவை என்கிற கொங்கு நாட்டில் நொய்யலாற்றங்கரையில் இருக்கக்கூடிய ‘வள்ளலூர்’ இவருக்குச் சொந்த ஊர். இவரது தந்தையார் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோரும் கூட தமிழின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவரது தாத்தா வில்லி பாரதத்தின் மொத்த பாடல்களையும் மனனம் செய்தவர். ஆக இவரது குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இவருக்குத் தமிழ் மீது பற்று ஏற்படக் காரணமாக இருந்துள்ளது,

அர்ப்பணிப்பான ஆசிரியர்கள்:

    பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் படித்த காலத்தில் இவருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மிகுந்த புலமை கொண்டவர்களாகக் காணப்பட்டிருக்கின்றனர். ஒரு ஆசிரியர் வயலின் வாசித்து பாடம் கற்பித்திருக்கிறார், மற்றொரு ஆசிரியர் கதை சொல்லி பாடம் கற்பித்திருக்கிறார். இவ்வாறாக மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிரியர்களின் வீட்டிற்குச் சென்று மூன்று வேளை உணவு உண்டும் அக்கால மாணவர்கள் பாடம் கற்றிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்கால ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை கூட மிக நேர்த்தியாக நடைபெற்றிருக்கிறது.

தானாகப் படித்த பட்டதாரி பாடங்கள்:

    அந்த காலத்தில் வித்துவான் தேர்வு மிகக் கடினமான ஒன்றாகும். அந்த வித்துவான் தேர்வில் இவர் வெற்றி பெற்றார். அதுமட்டுமில்லாமல் பி.யு.சி., இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுகளையும் எழுதி முடித்து வெற்றி பெற்றார்.

பரிமேலழகர் உரைத்திறன்:

    பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் அடிப்படையிலேயே திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். தான் முன்மாதிரியாகக் கொண்ட மு. வரதராசனார் அவர்களின் அனுமதியுடன் முனைவர் பட்டம் மேற்கொண்டார். அடிப்படையிலேயே திருக்குறள் மீது நாட்டம் அதிகம் என்பதாலும், உரையாசிரியர்களில் அதுவரை யாரும் முனைவர் பட்டம் மேற்கொள்ளவில்லை என்பதாலும் ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற தலைப்பினை முனைவர் பட்ட ஆய்விற்காக எடுத்துக் கொண்டார்.

ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள்:

    மு. வரதராசனார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ‘திருக்குறளில் அணிநலம்’ என்ற நூலை எழுதினார். திருவள்ளுவர் அறத்துப்பாலில் அறவோராகவும், பொருட்பாலில் அறிஞராகவும், காமத்துப்பாலில் கவிஞராகவும் திகழ்கிறார். திருவள்ளுவர் எந்த ஒரு சொல்லையும் வீணாக உபயோகிக்கவில்லை. ஒரு இலக்கியத்திற்குரிய அனைத்துத் தகுதிகளும் திருக்குறளில் காணப்படுகிறது.

    ஒரே குறளில் வரும் ஒரே விதமான இரண்டு சொற்கள் வெவ்வேறு பொருளைத்தரும்படி பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு பயன்படுத்துவதற்கு இலக்கணத்திலும் இடம் உண்டு.

‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

 மக்கட் பதடி எனல்’

பயனில்லாத சொற்களைப் பலமுறை பயன்படுத்துகின்ற ஒருவனை மகன் என்று சொல்லக் கூடாது, மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும். இதில் ‘மகன்எனல்’ என்ற இடத்தில் எனலானது எதிர்மறைப் பொருளையும், ‘பதடி எனல்’ என்னும் இடத்தில் எனலானது நேர்மறைப் பொருளையும் தருகின்றது.

    திருக்குறளை நுட்பமாக ஆராயும் போது தான். மனிதக் குலத்தின் ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள் என்பது விளங்கும்.

by Lakshmi G   on 09 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.