LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

குறவன் குறத்தி ஆட்டம்

குறவர் சாதியைச் சார்ந்த குறவனும், குறத்தியும் உடும்புத் தோலாலான கிஞ்சிராவையோ, டால்டா டப்பாவையோ தட்டிக்கொண்டு ஆடுவது குறவன் குறத்தியாட்டம். வேடம் புனைந்து இசைக் கருவிகளுடன் பாட்டுப்பாடி ஆடுவதும் குறவன் குறத்தி ஆட்டமாகும். தமிழகத்தில் குறவர் என்ற சாதியினர் பரவலாக வாழ்ந்தாலும், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றனர். இவர்களிடமிருந்து வேறானவர்கள் நரிக்குறவர்கள். இந்த ஆட்டத்தை பிற எல்லா சாதியினரும் ஆடுகின்றனர். இவ்வாட்டம் கரகாட்டத்தின் துணை ஆட்டமாக உருப்பெற்றபோது ஆண் கலைஞரே குறத்தியாக வேடமிட்டு ஆடினார். இன்றைய நிலையில் பெண்களே குறத்தி வேடம் புனைகின்றனர். இவ்வாட்டத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் பெருமளவு உள்ளனர். இன்றைய நிலையில் இக்கலை பரவலாக வழக்கிலுள்ள கலையாகத் திகழ்கிறது.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: குறவன் குறத்தி ஆட்டம்   குறவன் குறத்தி   Kuravan Kurathi   Kuravan Kurathi Attam           
 தொடர்புடையவை-Related Articles
குறவன் குறத்தி ஆட்டம் குறவன் குறத்தி ஆட்டம்
கருத்துகள்
24-Mar-2019 07:21:35 வினோத்.இ said : Report Abuse
பூர்வகுடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வந்த தாய்தமிழினமான குறவர் சமூகத்தின் வரலாற்றினை நன்கு அறியாமல் நீங்களே தவறான வரலாற்று பதிவு செய்வது மிகவும் கண்டிக்கதக்கது. ஆகையால் உண்மையான வரலாறு தெரிந்தால் மட்டும் பதிவிடுங்கள். மேலும் நரிக்குறவர் என்ற சமூகமே தமிழகத்தில் கிடையாது. மூத்த குடியான குறவர்களின் அடையாளத்தை ஒழிக்க திராவிட சூழ்ச்சியால் உருவாக்கபட்ட வந்தேரி நரிக்காரர்கள் வாக்ரிமொழி பேசக்கூடியவர்களை தமிழகத்தில் தமிழன் என்று அடையாள படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.