|
||||||||
குறிலசையும் நெடிலசையும் |
||||||||
குறிலே குறிலசை ஆகும்; நெடிலும்,
குறிலொற் றடுத்ததும், நெடிலொற் றடுத்ததும்
நெடிலசை யாக நிகழு மென்க.
காட்டு : சிந்துப்பாடல்களில் வரும் உயிர்க் குறிலும், உயிர்மெய்க் குறிலும், குறிலசை எனப்படும்; உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும், உயிர்க்குறிலொற்றும், உயிர்மெய்க் குறிலொற்றும், உயிர் நெடிலொற்றும், உயிர்மெய் நெடிலொற்றும் நெடிலசையாக நடைபெறும் என்றும் சொல்லுதல் வேண்டும்.
விளக்கம் : இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டே பாகுபாடுகள் உள்ளன.
காட்டு : குறிலசை என்பது : தனி உயிர்க் குறில் (அ)
உயிர்மெய்க் குறில் (க)
நெடிலசை என்பது : உயிர்நெடில் (ஆ)
உயிர்மெய் நெடில் (கா)
உயிர்க் குறிலொற்று (அல்)
உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
உயிர் நெடிலொற்று (ஆல்)
உயிர்மெய் நெடிலொற்று (கால்)
என்பனவாகும்.
குறிலே குறிலசை ஆகும்; நெடிலும், குறிலொற் றடுத்ததும், நெடிலொற் றடுத்ததும் நெடிலசை யாக நிகழு மென்க. காட்டு : சிந்துப்பாடல்களில் வரும் உயிர்க் குறிலும், உயிர்மெய்க் குறிலும், குறிலசை எனப்படும்; உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும், உயிர்க்குறிலொற்றும், உயிர்மெய்க் குறிலொற்றும், உயிர் நெடிலொற்றும், உயிர்மெய் நெடிலொற்றும் நெடிலசையாக நடைபெறும் என்றும் சொல்லுதல் வேண்டும்.
விளக்கம் : இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டே பாகுபாடுகள் உள்ளன. காட்டு : குறிலசை என்பது : தனி உயிர்க் குறில் (அ) உயிர்மெய்க் குறில் (க) நெடிலசை என்பது : உயிர்நெடில் (ஆ) உயிர்மெய் நெடில் (கா) உயிர்க் குறிலொற்று (அல்) உயிர்மெய்க் குறிலொற்று (கல்) உயிர் நெடிலொற்று (ஆல்) உயிர்மெய் நெடிலொற்று (கால்) என்பனவாகும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|