திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.)
மணக்குடவர் உரை:
மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்
தேவநேயப் பாவாணர் உரை:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை-உயர் குடியிற் பிறந்து தன்னைப்பற்றி உலகங்கூறும் பழிக்கு அஞ்சுபவனை; கொடுத்தும் நட்புக்கொளல் வேண்டும்-அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும். பல தலைமுறையாகப் பண்பட்டுவந்த குடியிற் பிறந்தவன், அக்குடிப் பண்பாட்டைக் காப்பவனாகவும் தன் குற்றத்தால் அக்குடிக்கு நேரும் பழிக்கு அஞ்சுபவனாகவும் இருப்பனாதலால் கொடுத்துங் கொளல் வேண்டும் நட்பு என்றார். நட்புத் தகுதிக்குக் குடிப்பிறப்புச் சிறந்ததென்பது இதனாற் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்
Translation
Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so you as friend that man may claim.
Explanation
The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.