வெளி வருவதற்கு முன்னரே பரவலாக 'சிறந்த படம்' என அங்கீகாரம் பெற்று விட்ட 'குற்றம் கடிதல்' நல்ல சினிமாவை பாராட்டும் அரங்கங்கள் எங்கு இருந்தாலும் தமிழ் நாட்டின் பெயரையும், தமிழ் சினிமாவின் பெயரையும் நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது.
பிரம்மா .G.என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஜே .எஸ் கே பிலிம் கார்ப்பரேசன் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஜே சதீஷ் குமார் மற்றும் கிரிஸ்ட் பிச்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி தயாரிக்கும் 'குற்றம் கடிதல்' ஜிம்பாப்வே திரை பட விழா, மும்பை திரை பட விழா, இந்தியன் பனோரமா ஆகிய திரை பட விழாக்களில் அங்கிகாரம், மற்றும் கௌரவத்தையும் ஈன்றதைப் போல இப்போது பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது சர்வதேச திரை பட விழாவில் கலந்துக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறது
ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதி தந்துக் கொண்டு இருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. இந்த தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான் இப்போது பயிற்சியாக மேற்கொண்டு, வழக்கமாக மாற்றுவேன்' என கூறினார் தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார்.
|